states

ஜி-20 உச்சி மாநாடு நாளை துவங்குகிறது

புதுதில்லி, செப். 7 - ‘ஜி-20’ நாடுகளின் உச்சி மாநாடு, புதுதில்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக தில்லி பிரகதி மைதானத்தில் புதிதாக ‘பாரத் மண்டபம்’ அமைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்கள் மற்றும் பல நாடு களின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். தலைவர்கள் தங்கு வதற்காக தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்,  ஒருநாள் முன்னதாக வெள்ளிக்கிழமை யன்றே ‘ஏர்போர்ஸ் ஒன்’ தனி விமானம் மூலம் தில்லி பாலம் விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர் விமானத்தில் கொண்டு வரப்படும் அமெரிக்க ஜனாதிபதியின் அதி காரப்பூர்வ அரசு கார் மூலம் தில்லி ஐ.டி.சி. மவுரியா ஷெரட்டன் நட்சத்திர ஹோட்ட லுக்கு செல்கிறார். ஹோட்டலின் 14-வது மாடியில் உள்ள அறையில் ஜோபைடன் தங்குகிறார். இந்த மாடியில் தங்கி இருப்ப வர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தனி லிப்ட் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது. ஓட்டலை சுற்றி பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஜோ பைடனின் தில்லி வருகையை யொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. துணை ராணுவ படையினர், சிறப்புப் பாதுகாப்பு குழுவை சேர்ந்த கமாண்டர்கள் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.  இதனிடையே, 2 நாட்கள் நடைபெறும்

‘ஜி-20’ மாநாட்டில் கலந்துகொள்ளும் உலக தலைவர்களுக்கு, இந்தியாவின் பழமை யான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்க முலாம் மற்றும் வெள்ளி பாத்திரங்களில் உணவு வகைகள் பரிமாறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக இந்த  பொருட்கள் விசேஷமாக தயார் செய்யப் பட்டு உள்ளன.  விதவிதமான தங்கமுலாம் மற்றும் வெள்ளி பாத்திரங்களை வடிவமைக்கும் பணி, ஏற்கெனவே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்ப டைக்கப்பட்டது. அவர்கள், ஜெய்ப்பூர், உதய்பூர், வாரணாசி மற்றும் கர்நாடகத்தின் கலைத்திறனை பறைசாற்றும் வகையில் வெள்ளி, தங்க முலாம் பூசப்பட்ட தட்டுகள், தம்ளர்கள் மற்றும் உணவு பரி மாறுவதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் கலைநயத்துடன் வடி வமைத்துள்ளனர். உப்பு போன்ற உணவுப் பொருட்கள் வைப்பதற்காக தனி கிண்ணங் களும், அதனை வைக்க வெள்ளியிலான சிறிய பெட்டிகளையும் வடிவமைத்துள் ளனர். இந்தியாவின் தேசிய பறவையான மயில் வடிவமும் வெள்ளியால் வடிவமைக் கப்பட்டு இருக்கிறது.