states

img

8 முக்கியத் துறைகளின் வளர்ச்சி விகிதம் சரிவு!

புதுதில்லி, மார்ச் 1- முக்கியத் துறைகள் எனப்படும் நாட்டின் 8 அடிப்படைத் துறை களின் வளர்ச்சி விகிதம் 2022 ஜன வரியில் 3.7 சதவிகிதமாக பதிவாகி உள்ளது. இது கொரோனாவுக்கு முந் தைய சூழலை தாண்டியதாக இருந்தாலும் 2021 டிசம்பர் மாத வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் 4 புள்ளிகள் சரிந்துள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய்,  இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப் பட்ட எண்ணெய் தயாரிப்புகள், உரங்கள், ஸ்டீல், சிமெண்ட் மற் றும் மின்சாரம் ஆகிய துறைகளே நாட்டின் 8 முக்கியத் துறைகள் ஆகும். இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி குறியீட்டில் (IIP) 40.27 சதவிகித பங்களிப்பை இந்த 8 துறைகளே கொண்டி ருக்கின்றன. அந்த வகையில், எட்டு முக்கி யத் தொழிற்துறைகளின் ஒருங்கி ணைந்த வளர்ச்சிக் குறியீடு 2021 டிசம்பர் மாதத்தில் 4.1 சத விகிதம் என்ற அளவிற்கு வளர்ச்சி அடைந்திருந்த நிலையில், 2022 ஜனவரியில் 3.7 சதவிகிதமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இவற்றில் கச்சா எண்ணெய் உற்பத்தி, இந்தியாவில் தொடர்ந்து 50-ஆவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது.

கடந்த 2021 ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் தற் போது 2.4 சதவிகிதம் சரிந்துள் ளது. அதேபோல் விவசாய உரத் தின் உற்பத்தி அளவும் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2022 ஜனவரியில் 2 சதவிகிதம் சரிந்துள் ளது. மின்சார உற்பத்தி மிகக்குறை வாக 0.2 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.  ஸ்டீல் (2.8 சதவிகிதம்), சிமெண்ட் (13.6 சதவிகிதம்), நிலக் கரி (8.2 சதவிகிதம்), இயற்கை எரிவாயு உற்பத்தி (11.7 சதவிகிதம்), பெட்ரோலியம் சுத்திகரிப்பு (3.7 சதவிகிதம்) உள்ளிட்ட துறைகள் 2022 ஜனவரியில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஒன்றிய அரசின் மொத்தச் செலவுக்கும், மொத்த வரு வாய்க்கும் (கடன் அல்லாத வரு வாய்) இடையிலான வித்தியாசமே நிதிப்பற்றாக்குறை ஆகும். அந்த வகையில், 2021-22 நிதி யாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக் குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), 6.9 சதவிகி தம் என்ற அளவுக்குள் வைத்தி ருக்க ஒன்றிய அரசு பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. இந்நிலையில், 2021-22 நிதி யாண்டின் முதல் 10 மாதங்களில் (2021 ஏப்ரல் முதல் 2022 ஜனவரி) பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட நாட்டின் நிதிப் பற்றாக்குறை இலக்கில் 58.9 சதவிகிதத்தை எட்டி யுள்ளது.