states

img

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் பிடித்த சீன நிறுவனம்

புதுதில்லி இந்திய ஸ்மார்ட்போன் சந்தை யில் ஒப்போ (Oppo), ஜியோமி (Xiaomi), ரியல்மி (Realme), விவோ (vivo), சாம்சங் (samsung), ஆப்பிள் - ஐபோன் (apple - i phone), மோட்டோரோலா (Motorola), நோக்கியா (nokia) ஆகியவைகள் முன்னணியில் இருக்கின்றன. இதில் ஒப்போ, ரியல்மி, ஜியோமி, விவோ ஆகிய 4 நிறுவனங்கள் சீனாவைச் சேர்ந்தவை ஆகும். சாம்சங் தென் கொரியாவையும், மோட்டோரோலா மற்றும் ஆப்பிள் - ஐபோன் அமெரிக்கா வையும், நோக்கியா பின்லாந்தையும் தலைமையிடமாகக் கொண்டு இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரு கின்றன.  இந்நிலையில், ஜூன் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங், விவோவை பின்னுக்குத்தள்ளி சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனம் ஜியோமி முதலிடத்தை பிடித்துள்ளது என சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கானலிஸ் (Canalys) தகவல் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக கான லிஸ் அறிக்கையில் மேலும் கூறப் பட்டுள்ளதாவது,”ஜியோமி நிறுவ னத்தின் ஏற்றுமதிகள் ஆண்டுதோறும் 24% அதிகரித்து வரும் நிலையில், ஜூன் காலாண்டில் அதன் சந்தை மதிப்பு பங்கை 15% இல் இருந்து 18% ஆக உயர்த்தியுள்ளது. அதே போல மற்றொரு சீன நிறுவன மான விவோ 4% வருடாந்திர வளர்ச்சியு டன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, 18% சந்தைப் பங்கைப் பராம ரிக்கிறது. சாம்சங் ஏற்றுமதியில் 8% சரிவுடன் மூன்றாவது இடத்திற்கு கீழே இறங்கியுள்ள நிலையில், அந்நிறுவ னம் 17% சந்தைப் பங்கைப் பெற்றுள் ளது. ரியல்மி மற்றும் ஒப்போ முறை யே 12% மற்றும் 11% தொகுதி பங்குடன் முறையே நான்காவது மற்றும் ஐந்தா வது இடத்தில் உள்ளன” என குறிப்பி டப்பட்டுள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சிறப்பான சந்தை மதிப்பை பெற்றுள்ள டாப் 5 நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் சீனாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.