புதுதில்லி, டிச. 22 - நரிக்குறவர், குருவிக்காரர் சமூ கத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் (Scheduled Tribes) சேர்ப்பதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறை வேற்றப்பட்டது. இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த வாரம் வியாழக்கிழமை (டிசம்பர் 15) அன்று நிறைவேறிய நிலையில், டிசம்பர் 22 அன்று மாநிலங்களவை யிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த சட்டத் திருத்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்பு தலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. மசோதாவுக்கு குடியரசுத் தலை வரின் ஒப்புதல் கிடைத்த பின் தமிழ கத்தின் பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தி னர் இணைக்கப்படுவர். மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது, “‘அரசியல மைப்புச் சட்ட (பழங்குடியினர்) ஆணை (இரண்டாவது திருத்தம்)-2022’ எனும் இந்த மசோதா, தமிழகத்தில் உள்ள பழங்குடியின சமூகங்களுக்கு நீதி வழங்கும் வகையில் அமைந்துள்ள தாக” ஒன்றிய பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா குறிப்பிட்டார்.
மேலும், “இந்த நடவ டிக்கையின் பின்னணியில் எந்த அரசி யலும் இல்லை; பழங்குடியினர் வாழ்வை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கம் மட்டுமே உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 27 ஆயிரம் பேர் பயனடைவர்” என்றும் அவர் கூறினார். “தமிழகத்தில் பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை சேர்க்க வேண்டுமென்ற மாநில அரசின் பரிந்துரையின் பேரி லேயே இந்த மசோதா ஒன்றிய அர சால் உருவாக்கப்பட்டது. தமிழக அர சின் பரிந்துரையின் அடிப்படையில், இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் பழங்குடியினர் தேசிய ஆணையத்திடம் ஆலோசிக்கப்பட்டு, அரசமைப்புச் சட்ட (பழங்குடியினர்) ஆணை-1950 அட்டவணையின் 14-ஆவது பகுதியில் திருத்தம் மேற்கொள்ள முன்மொழி யப்பட்டது” என்று மசோதாவில் குறிப் பிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன் றம் ஒப்புதல் அளித்ததையடுத்து, உரிய விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு, பழங்குடியினர் பட்டியலின்கீழ் மேற் கண்ட இரு சமூகத்தினரும் அனைத் துப் பலன்களையும் பெற முடியும். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு பெற லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.