ஹைதராபாத், ஜூன் 7- தெலுங்கானாவில் சிறுமி ஒருவர் கும்பல் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் ஐந்தாவது குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் இவர் இரண்டு ஆண்டுகள் சிறை செல்வது உறுதி. ஹைதராபாத் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தோழியின் பிறந்த நாள் விழாவுக்கு சென்ற 17 வயது சிறுமி செல்வாக்கு மிக்க குடும் பத்தை சேர்ந்த சிறுவர்களால் காரில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட் டார். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐந்தாவது குற்றவாளி உமைர் கான் இன்னும் கைது செய்யப்படவில்லை அவர் தனது குடும்பத்தினருடன் ஊட்டியில் இருப்ப தாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை ஊட்டிக்கு சென்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறின. இதற்கிடையில் ஊட்டியில் இருந்து, குற்றவாளி பெங்களூருக்கு காரில் தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் காவல்துறை யினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி யுள்ளனர்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு
ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடு மையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் படத்தை வெளியிட்ட துப்பாக்க தொகுதி பாஜக சட்ட மன்ற உறுப்பினர் ரகுநந்தன் ராவ் மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், அபிட்ஸ் காவல் நிலையத்தில் ரகு நந்தன் ராவ் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 228 ஏ-இன் கீழ் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சட்டப்பிரிவு 228 ஏ- இன் கீழ், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எந்த வொரு நபரின் பெயரையும் அல்லது எந்த விஷயத்தையும் வெளியிடுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.