புதுதில்லி, நவ.8- “கல்வி லாபம் ஈட்டுவ தற்கான தொழில் அல்ல!” என்று உச்சநீதிமன்றம் கூறி யுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டணம் ஆண்டுக்கு ரூ. 24 லட்சம் என அரசு நிர்ண யித்தது. 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று இதற் கான அரசாணையையும் வெளியிட்டது. ஆனால், இந்த ஆந்திர அரசின் இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, உயர் நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து, ஆந்திர பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தது. நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் சுதான்ஷூ துலியா அமர்வு இந்த மேல்முறையீட்டு மனு வை விசாரித்தது. அப்போது, ரூ.24 என்ற புதிய கட்டணத் தொகையானது முன்பு நிர்ண யித்த தொகையை விட 7 மடங்கு அதிகம் என்றும் இது எந்த வகையிலும் நியாய மற்றது என கூறிய உச்ச நீதி மன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உறுதி செய் துள்ளது. மேலும், கல்வி என்பது லாபம் ஈட்டுவதற்கான ஒரு தொழில் அல்ல என்று கண் டித்துள்ள உச்ச நீதிமன்றம், முந்தைய கட்டணமே நியா யமானது என்றும் தீர்ப்ப ளித்துள்ளது.