states

img

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் ஆஜராக வேண்டும் உச்சநீதிமன்ற கொலீஜியம் உத்தரவு

டிசம்பர் 8ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் தீவிர இந்  துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் விழாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், பெரும்பான்மை சமூகம் என்ற பெயரில்  வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர்  குமார் பேசினார். அரசியலமைப்பை காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள  நீதிபதி ஒருவர் இந்துத்துவா அமைப்பின்  விழாவில் பங்கேற்றது மட்டுமல்லாமல், அந்த அமைப்பிற்கு ஆதரவாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக பேசியது நாடு முழு வதும் கடும் கண்டனம் கிளம்பியது. நீதி பதியின் பேச்சிற்கு கடும் கண்டனம் தெரி வித்த உச்சநீதிமன்றம்,”விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் விழாவில் நீதிபதி  சேகர் குமார் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு  குறித்த விவரங்களை அலகாபாத் உயர்நீதிமன்றம் சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டது. அதே போல நீதிபதி  சேகர் குமாரை பதவி நீக்கம் செய்யக்  கோரி நாடாளுமன்ற மாநிலங்களவை யில் 55 எம்.பி.,க்கள் அவை செயலாளரி டம் தீர்மான மனு அளித்தனர். இந்நிலையில், அலகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதி சேகர் குமார் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்ற கொலீஜி யம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்ற கொலீஜியம் விடுத்துள்ள உத்தரவில்,”அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் பேசியதை ஏற்க  முடியாது. அதனால் டிசம்பர் 17ஆம்  தேதி நீதிபதி சேகர் குமார் தலைமை நீதி பதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலிஜியம் முன் ஆஜ ராக வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.