2018-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், பீமா கொரேகானில் தலித்துக்களுக்கு எதி ராக வன்முறை அரங் கேற்றப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட தலித் மக் கள் மீதே வழக்குகளும் போடப்பட்டன. இதனிடையே இந்த வழக் கில், பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு, விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி யுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டும் இதே போல சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக பவார் அப்போது ஆஜராகவில்லை.