ஹைதராபாத் பொதுவாக உயிரிழந்த நபர்களின் உறுப்புகளை தானம் செய்வதன் மூலமாக ஒருவரோ, பலரோ உயிர் வாழ்கின்றனர். அந்த வகையில் எதிர்பாரா விதமாக விபத்தில் மூளைச்சாவு அடைந்த வர்களின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் மூலம் பலர் வாழ்வு பெறுகின்றனர். மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தில்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உடல் உறுப்பு தானம் அதிகரித்து வருகிறது. சிக்கலானது... உடல் உறுப்புகளை தானம் செய்வது மிக சாதாரண விஷயம் அல்ல. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் உடல் உறுப்புகளை அகற்றி, குறிப்பிட்ட மணிநேரத்தில் பொருத்த வேண்டி யது மிகவும் அவசியமாகும். ஒவ்வொரு உள்ளு றுப்புக்கும் அதன் தன்மைக்கேற்ப, உடனடியாக பொருத்த வேண்டிய இக்கட்டான சூழலும் உள்ளது. ஹைதராபாத் மெட்ரோ நிர்வாகம் கலக்கல் இந்நிலையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் தானம் பெறப்பட்ட இதயம், மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப் பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி கரமாக நடைபெற்றுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள எல்.பி. நகரின் காமினேனி மருத்துவ மனையில் பெறப்பட்ட இதயத்தை, லக்டிகாபு லில் இருக்கும் கிளினிக்கல்ஸ் குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த இரண்டு மருத்துவமனைக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 13 கி.மீ ஆகும். தில்லி, சென்னை, பெங்களூருவைப் போல ஹைதராபாத் நகரமும் நெரிசல் மிகுந்த பகுதி ஆகும். போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட பகுதி என்பதால், ஆம்புலன்ஸ் மூலம் சென்றால் கூட தாமதம் ஆகலாம் என்ற சூழல் ஏற்பட்டது. இதனால் இதயத்தை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்ல மருத்துவர்கள் திட்ட மிட்டனர். ஹைதராபாத் மெட்ரோ நிர்வா கத்திடம் நிலைமையை கூறி, வெறும் 13 நிமிடத்தில் சென்றடைந்து இதயத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். குவியும் பாராட்டு... 13 கி.மீ., தொலைவை 13 நிமிடங்களில் சென்றடைய மருத்துவ நிபுணர்கள், ஹைதரா பாத் மெட்ரோ ரயில் அதிகாரிகளுடன் பேசி திட்டமிட்டனர். அதன்படி மெட்ரோ நிர்வாகம் பச்சை வண்ண வழித்தடம் (நான்- ஸ்டாப்) பிரத்யேகமாக அமைக்கப்பட்டு மெட்ரோ அதிகாரிகள், ஊழியர்களின் ஒத்துழைப்புடன் உரிய நேரத்தில் இதயம் கிளினிக்கல்ஸ் குளோ பல் மருத்துவமனையைச் சென்றடைந்தது. மெட்ரோ ரயிலில் பலத்த பாதுகாப்போடு, எந்த இடையூறும் இன்றி மருத்துவர்களால் இதயம், திட்டமிடப்பட்டவாறே 13 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கடந்து, பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இதை யடுத்து, மருத்துவர்களும், பொதுமக்களும், மெட்ரோ நிர்வாகத்தின் அதிகாரிகளுக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமூகவலைத்தளங்க ளில் ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாகம் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது. அதே போல மெட்ரோ ரயில் கொண்டு செல்லலாம் என திட்டம் வகுத்த மருத்துவர்களும் டாப் டிரெண்டிங்கில் சமூகவலைத்தளங்களில் வைர லாகி வருகின்றனர்.