states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்

சுவிஸ் வங்கிகளில் இந்திய பணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும், 2024இல் ரூ.36,700 கோடியை எட்டியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு வங்கிகளில் சேமிக்கப்பட்ட கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வந்து, ஒவ்வொரு இந்திய குடிமகனின் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று யாரோ ஒருவர் சபதம் எடுத்தது நினைவிருக்கிறதா? அவர்தான் இன்னமும் பிரதமராக இருக்கிறாரா?

ஊடகவியலாளர் அர்பா ஷெர்வானி

முதலில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். அது என்னவென்றால் பல நாடுகள் தோன்றுவதற்கு முன்பே, உலகத்துக்கு நகரங்களையும், அறிவியலையும், கவிதையையும் கொடுத்த நாடு ஈரான் தான். அதனால் 7,000 வருட தொன்மை வாய்ந்த நாகரிகத்தை இன்றைய இழிவான உத்திகளும் அரசியலும் வீழ்த்திட முடியாது.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

கடந்த 20 ஆண்டுகளாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் முதியோர், விதவைகளுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தவே இல்லை. ஆனால் இந்த முறை அவர்கள் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது தெரிந்ததால், இப்போது தான் ஓய்வூதியத்தை உயர்த்துகிறார்கள்.

ஹாலிவுட் நடிகர் மார்க் ரபலோ

இராக் நாட்டுடன் போர் புரிந்தது தவறு என இப்போதும் பலர் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம். அதனால் ஈரான் நாட்டுடனாவது அமெரிக்கா அந்தத் தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும்.