இந்தியப் பங்குச் சந்தைகள், கடந்த 2 வாரங்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வருகின்றன. அந்த வகையில், வர்த்தக வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தைக் குறியீடான ‘சென்செக்ஸ்’ 190.97 புள்ளிகளும், தேசியப் பங்குச் சந்தையான ‘நிப்டி’ 68.85 புள்ளி களும் சரிவைக் கண்டது.