states

img

பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் தொடர்ந்து சரிவு

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், புதனன்று  பங்குச்சந்தை சரிவோடு தான் ஆரம்பமாகின. இதனால் நிப்டி 19,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. புதனன்று மதிய நிலவரப்படி தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 90 புள்ளிகள் சரிந்து 18,989 புள்ளிகளானது. நிப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 36 நிறுவனங்களின் பங்குகள் விலை அடிமேல் அடி வாங்கின. அதே போல மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 284 புள்ளிகள் சரிந்து 63,591 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தொடர்ந்து பங்குகள் சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியுடன் உள்ளனர்.