states

img

கேரளத்தில் மீண்டும் நிபா நோய் பரவல் சாத்தியமுள்ள நபர்களின் மாதிரிகளும் பரிசோதிக்கப்படும் : முதல்வர் தகவல்

நிபா நோய் தடுப்பு வழிகாட்டுதலின்படி பாதிப்புக்குள்ளான அனைவரின் மாதிரிகளும் பரிசோதிக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப் படும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தி, தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியது அம்மாநில அரசு. அமைச்சர் வீணா ஜார்ஜ் மலப்புரம் வந்து பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். நிபா  தடுப்புக்கான நிபா வழிகாட்டுதல்  களின்படி சில மணி நேரங்களில் 25 குழுக்கள் அமைக்கப்பட்டதாக முதல்வர் பினராயி விஜயன் கூறினார். ஜுலை 20 சனியன்று காலை நோய் தொடர்பு கண்காணிப்பு தொடங்கியது. 24 மணி நேர  கட்டுப்பாட்டு அறை தொடங்கப் பட்டுள்ளது. தொடர்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு வரைபடம் வெளியிடப்பட்டது. முதன்மை தொடர்பு பட்டியலில் 246 பேர் உள் ளனர் அவர்களில் 63 பேர் அதிக ஆபத்து பிரிவில் உள்ளனர். மஞ்சேரி மருத்துவக் கல்லூரி யில் 30 தனிமைப்படுத்தப்பட்ட அறைகளும், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் தேவை யான தீவிர சிகிச்சை வசதிகளும் உள்ளன. பாண்டிக்காடு, அனக்காயம் ஊராட்சிகளில் தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வந்தூர், நிலம்பூர், கருவரகுண்டு ஆகிய இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ மனைகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கண் காணிப்பில் உள்ளவர்களின் வீடு களுக்கு உணவு மற்றும் மருந்து களை வழங்க தன்னார்வலர்களின் சேவையை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிபா தடுப்புக்கு பொதுமக்கள் இணைந்து செயல்பட முடி யும். வவ்வால்களின் வாழ்விடத் தை அழிக்கக் கூடாது, மற்ற  உயி ரினங்கள் கடித்த பழங்களைச் சாப்பிடக் கூடாது, வௌவால்கள், அவற்றின் கழிவுகள் அல்லது பொருட்களைத் தொட நேரிட் டால் சோப்பு அல்லது சானிடைசர் மூலம் கைகளைக் கழுவ வேண் டும். சந்தேகம் இருப்பவர்கள் நிபா கட்டுப்பாட்டு அறைக்கு அழைக்கலாம் என முதல்வர் தெரி வித்துள்ளார். கட்டுப்பாட்டு அறை எண்கள்: 0483-2732010, 0483-2732050, 0483-2732060, 0483-2732090