states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

ஆதார் விவரங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் மாற்றங்கள் மேற்கொள்வதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இனிமேல் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க மாட்டேன் என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் துணிச்சலாகப் போராடிய குதிரை சவாரி தொழிலாளி ஆதில் ஷாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் விபத்தை தொடர்ந்து நாட்டில் உள்ள 9 போயிங் விமானங்களில் பாதுகாப்பு சோதனை நிறைவு என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு உத்தரவின்படி 9 போயிங் 787 விமானங்களில் பாதுகாப்பு சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும், எஞ்சிய 24 விமானங்களில் விரைவில் சோதனை முடிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.