தில்லி, ஜூலை 26- நேஷனல் ஹெரால்டு வழக்கில் இரண்டாவது முறையாக அம லாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜூலை 26 செவ்வாயன்று ஆஜரா னார். முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசி யேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது. அசோசி யேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் இருந்ததால் அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடியே 25 லட்சத்தை வட்டியில்லா கடனாக கொடுத்தது. அந்த கடனை அசோசியேட்டடு நிறு வனம் திருப்பிச் செலுத்த முடியாத தால், அதன் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை இயக்குனர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் வாங்கிக்கொண்டது.
இதன்மூலம் வெறும் ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறு வனம், ரூ.90 கோடி கடனுக்காக அசோ சியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்து கள், பங்குகளை பெற்றுக்கொண்ட தாகவும் இதில் முறைகேடு இருப்ப தாகவும் பாஜக சுப்ரமணியசாமி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர் ந்தார். இதனை அடிப்படையாக கொண்டு சட்டவிரோத பண பரிவர்த்த னை தடைச்சட்டத்தின் கீழ் சோனியா காந்தி, ராகுல்காந்தி மீது வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை விசார ணை நடத்தி வருகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூலை 21 ஆம் தேதி முதல் முறை யாக ஆஜரான சோனியா காந்தியிடம் இரண்டு மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி னர். அப்போது அவர்கள் எழுப்பிய 28 கேள்விகளுக்கு சோனியா காந்தி பதிலளித்திருந்தார்.இந்நிலையில் இரண்டாவது நாளாக ஜூலை 26 செவ்வாயன்றும் விசாரணைக்கு ஆஜரானார். இதே வழக்கில் கடந்த மாதம் அமலாக்கத்துறை முன்பு ஆஜரான ராகுல்காந்தியிடம் ஐந்துநாட்கள் (கிட்டத்தட்ட 50 மணி நேரம்) விசாரணை நடைபெற்றது. அமலாக்கத்துறையின் நட வடிக்கை “அரசியல் பழிவாங்கும் செயல்” என்று காங்கிரஸ் தலை வர்கள் விமர்சித்துள்ளனர். அம லாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் செவ்வாயன்று காங்கிஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.