states

img

உத்தரவை உடனே திரும்பப் பெறுக!

ஒன்றிய கல்வி அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம். பி., கடிதம்

ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் பணியிட தேர்வுகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்கும் உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி  ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

என்.ஐ.டி உள்ளிட்ட ஒன்றிய அர சின் கல்வி நிறுவனங்களில் ஆசி ரியரல்லாத அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறி விக்கையை தேசிய தேர்வு முகமை (National Testing Agency) ஆக ஸ்ட் 17 அன்று வெளியிட்டுள்ளது. ராய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், கோழிக்கோடு, சூரத்கல், ராஞ்சி,  ஹமிர்பூர், சில்சார், குருச்சேத்திரா ஆகிய என்.ஐ டி கள், ஜெய்ப்பூரில் உள்ள எம்.என்.ஐ.டி ஆகிய நிறுவனங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான ஆசிரியரல்லாத அலுவலர் பணி நியமனங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிக்கை அது. அதில் இந்தி மொழித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் மதிப்பெண்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழித் தேர்வுகளுக்கு தரப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி என மதிப்பெண் விவரம் பிரித்து தரப்படவில்லை. இது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். மேலும் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த  மாணவர்களின் வாய்ப்புகளை அதிகரித்து இந்தி பேசாத மாண வர்களின் வாய்ப்புகளை கடுமை யாக பாதிக்கக் கூடியதாகும். மேலும் இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்திற்கு எதிரானது.  அலுவல் மொழி விதிகள் 1974, மாநிலங்களை 3 பகுதி களாக பிரித்து இருப்பதும், தமிழ்நாட்டிற்கு ஒட்டு மொத்தமாக விதி விலக்கு தந்திருப்பதும் கூட தேசிய தேர்வு முகமையால் புறம் தள்ளப்படுவது ஏற்கத்தக்க தல்ல. வன்மையான கண்டனத்தி ற்குரியது. உடனடியாக தலை யிட்டு தேசிய தேர்வு முகமை அறி வித்துள்ள தேர்வு பாட முறையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய  கல்வி அமைச்சர் தர்மேந்திர பிர தானுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.