புதுதில்லி, டிச.10- எல்லைகளில் கூட்டுப் பயிற்சி என்பது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின், பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்பின் ஒரு வழக்கமான ஆண்டு நடவடிக்கையாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், சமீபத்திய கடந்த காலங்களில், நாடுகளின் எல்லைகளில் நடத்தப்படும் கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளுக்கான, ஷாங்காய் கூட்டு றவு அமைப்பின் (SCO) முன்மொழிவுகளை அரசு ஆதரித்துள்ளதா என்றும், ஆம் எனில், அதன் விபரங்கள் என்னென்ன என்றும், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பினை (SCO) ஏற்படுத்தியுள்ள நாடுகளின் விபரங்கள் என்னென்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேஹி அளித்த பதில்கள் வருமாறு: எல்லைகளில் கூட்டுப் பயிற்சி என்பது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின், பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்பின் ஒரு வழக்கமான ஆண்டு நடவடிக்கையாகும். இந்த கூட்டுப் பயிற்சியின் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்கள் என்பவை, எல்லை மேலாண்மை சம்பந்தமான அனு பவங்களை பகிர்ந்து கொள்வதுதான். இதில் இந்தியாவும் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளது. தற்போது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு, எட்டு உறுப்பு நாடுகளைப் பெற்றுள் ளன. அவை, இந்தியா, கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ் தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் ஆகியவை யாகும். (ந.நி.)