புதுதில்லி, ஜன.22- இந்திய பங்குச் சந்தை களில், வெள்ளிக்கிழமை யுடன் முடிவடைந்த வாரத் தில் பங்கு வர்த்தகம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந் தைக் குறியீடான ‘சென் செக்ஸ்’ ஒட்டுமொத்தமாக கடந்த 5 நாட்களில் 2 ஆயி ரத்து186 புள்ளிகளை இழந்துள்ளது. கடந்த திங் கிட்கிழமையை தவிர்த்து மற்ற 4 நாட்களிலும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித் துள்ளது. கடந்த வாரம் வெள்ளிக் கிழமையன்று (ஜனவரி 14) வர்த்தக வார நிறைவில், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவ னங்களின் மதிப்பு ரூ. 278.49 லட்சம் கோடியாக இருந் தது. இது ஜனவரி 21- வெள் ளிக்கிழமையுடன் முடிவ டைந்த வர்த்தக வாரத்தில், ரூ. 269.85 லட்சம் கோடி யாக சரிந்துள்ளது. ஒருவாரத்தில் மட்டும், பங்குச் சந்தை முதலீட்டா ளர்களுக்கு சுமார் ரூ. 8 லட் சத்து 64 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த வார பங்கு வர்த்த கத்தில், ஒட்டு மொத்த அள வில் மும்பை பங்குச் சந்தை யின் குறியீட்டு எண்ணான ‘சென்செக்ஸ்’ 2,185.85 புள் ளிகள் குறைந்து 59,037.18 புள்ளிகளில் நிலைகொண் டுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் ணான ‘நிப்டி’ 638.60 புள்ளி கள் சரிவு கண்டு 17,617.15 புள்ளிகளில் முடிவுற்றுள் ளது. பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறு வனங்களின் கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவு கள், பணவீக்கம் குறித்த கவ லைகள் மற்றும் அமெ ரிக்க பெடரல் வங்கி விரை வில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர் பார்ப்பு போன்றவையே இந்த வார பங்கு வர்த்த கத்தில் கடும் சரிவு ஏற்பட்ட தற்கு காரணம் என்று கூறப் படுகிறது.