புதுதில்லி, மார்ச் 18 - “‘தி காஷ்மீர் பைல்ஸ்’ எனும் திரைப்படம் எடுக்க முடியு மென்றால், ‘லக்கிம்பூர் பைல்ஸ்’ என்ற பெயரிலும் திரைப்படம் எடுக்கப்பட வேண்டும்” என்று சமாஜ் வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். கடந்த 1990-ஆம் ஆண்டின் துவக்கத்தில், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த இந்து பண்டிட்டுகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி யதையும், அதைத் தொடர்ந்து பண்டி ட்டுகள் அங்கிருந்து வெளியேறி யதையும் மையமாகக் கொண்டே ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப் பட்டாலும், இன்றைய சூழலில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை பரப்பும் திட்டத்துடன் அது கையாளப்பட்டிருப்பதால், இந்தப் படம் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
மல்லி கார்ஜூன கார்கே, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலை வர்கள் கண்டனம் தெரிவித்துள் ளனர். இந்நிலையில், “ஜம்மு - காஷ்மீர் சம்பவம் தொடர்பாக ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ எனும் திரைப்படம் எடுக்க முடியுமென்றால், லக்கிம்பூர் கெரி சம்பவத்தை வைத்து ‘லக்கிம்பூர் பைல்ஸ்’ திரைப்படம் எடுக்க வேண்டும்” என்று, உ.பி. முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷூம் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள் ளார். உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கெரி யில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதி ராக போராடிய விவசாயிகள் 5 பேர் மீது, பாஜக-வைச் சேர்ந்த ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா காரை ஏற்றி படுகொலை செய்தார். இதைத்தான் படமாக எடுக்குமாறு அகிலேஷ் கூறியுள்ளார்.