உ.பி.யில் ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் அட்டூழியம் ராகேஷ் திகாயத் மீது தாக்குதல்
ஐக்கிய விவசாயிகள் முன்னணி கடும் கண்டனம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேச மாநிலம் முசா பர்நகரின் டவுன் ஹால் மைதானத் தில் வெள்ளிக்கிழமை அன்று ஐக் கிய விவசாயிகள் முன்னணி (சம் யுக்த கிசான் மோர்ச்சா - SKM) தலை வர்களில் ஒருவரான பாரதிய கிசான் யூனியன் (BKU) விவசாய அமைப் பின் தலைவர் ராகேஷ் திகாயத் தலைமையில் பேரணியுடன் கண் டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் அடாவடி இந்த பொதுக்கூட்டத்தில் ராகேஷ் திகாயத்,”பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தா னின் நீர் விநியோகத்தை நிறுத்து வது அநீதியானது. இந்தியாவி லும் பாகிஸ்தானிலும் உள்ள விவ சாயிகள் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இத்த கைய இரத்தப்போராட்டத்தால் உண்மையில் யார் பயன் அடைகி றார்கள் என்பதை யாரும் விசா ரிக்கவில்லை ஏன்?” என கேள்வி எழுப்பினார். உடனே விவசாயிகள் பொதுக் கூட்டத்திற்குள் புகுந்த ஆர்எஸ்எஸ் - பாஜக இந்துத்துவா குண்டர் கள்,”நீங்கள் எப்படி பாகிஸ்தான் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசலாம்” எனக் கூறி விவசாயிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். குறிப்பாக இந்துத்துவா குண்டர் கள் ராகேஷ் திகாயத்தின் தலை யில் தாக்குதல் நடத்தி, அவரது தலைப்பாகையை கீழே தூக்கி எறிந்ததாக செய்திகள் வெளியாகி யுள்ளன. எஸ்கேஎம் கண்டனம் இந்நிலையில், ராகேஷ் தியா கத் மீதான இந்துத்துவா குண்டர் களின் தாக்குதலுக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா - SKM) கடும் கண் டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக் கையில்,”ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கர வாத தாக்குதலுக்கு எதிராக முழு மக்களையும் ஒன்றுபடுத்துவ தற்குப் பதிலாக, காவி கொடி களை ஏந்தி “மோடி, மோடி” என்று கோஷமிட்ட கும்பல், ராகேஷ் திகா யத் மீது தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல், கொடிக் கம்பு களால் அடித்து, அவரது தலைப் பாகையை பலவந்தமாக கழற்றி, அவரை கொலை செய்யும் நோக் கில் தாக்குதல் நடத்தியது. ஆனால் சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த உத்தரப்பிரதேச காவல்துறையினர் இந்துத்துவா குண்டர்களின் தாக்குதலை தடுக்க தவறிவிட்டனர். குறிப்பாக பிரத மர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் ஆகியோர் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைவர் மீதான தாக்கு தலுக்கு எதிராக கண்டனம் தெரி விக்கவில்லை. குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிடவில்லை. இது ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டணி யின் தேசவிரோத, நவ-பாசிச முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. அச்சுறுத்தலில் மாணவர்கள் ஆஎஸ்எஸ் - பாஜக கூட்டணி, காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான மக்களின் கோபத்தை சூழ்ச்சிகரமாக பயன் படுத்தி, சிறுபான்மையினர், விவ சாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இந்தியாவின் மதச்சார்பற்ற மற் றும் ஜனநாயக மரபுகளை கடை பிடிக்கும் முற்போக்கு பிரிவுகள் மீது வெறுப்பை வளர்க்க முயற் சிக்கிறது. இதுவரை உத்தரப்பிர தேசத்தின் ஆக்ராவிலும், கர்நாட காவின் மங்களூரிலும், சங் பரிவா ரத்தைச் சேர்ந்த தீவிர வலதுசாரி சமூக அமைப்புகளால் 2 முஸ்லீம் இளைஞர்கள் கொடூரமாக கொல் லப்பட்டனர். காஷ்மீரி மாண வர்கள் மற்றும் வணிகர்கள் உத்தர கண்ட், ராஜஸ்தான், குஜராத், மகா ராஷ்டிரா மற்றும் உத்தரப்பிர தேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் நிலைமையை எதிர்கொள்கின்ற னர். ராகேஷ் தியாகத் மீது தாக்கு தல் நடத்திய அனைத்து குற்றவாளி களும் உடனடியாக கைது செய் யப்பட வேண்டும். உத்தரபிர தேசத்தில் நிலவும் “காட்டுமிராண்டி ஆட்சி” முடிவுக்கு வர வேண்டும் என ஐக்கிய விவசாயிகள் முன் னணி கோருகிறது. மேலும், அனைத்து பிரிவு மக்களையும், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மீதான ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டணியின் பிரிவினைவாத மற்றும் வன்முறை பிரச்சாரத்தை வெளிப்படுத்த அழைப்பு விடுக்கிறது. தேசிய ஒற்றுமைக்கு ஏற்பட்டுள்ள கடும் அச்சுறுத்தலான ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச பயங்கரவாத சக்திகள் மற்றும் ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டணியின் நவ-பாசிச சக்திகளுக்கு எதிராக, அனைத்து வர்க்க மற்றும் மக்கள் அமைப்பு களையும் ஒன்றுபடுத்தி போராட் டத்தை நடத்த ஐக்கிய விவசாயி கள் முன்னணி அழைப்பு விடுக்கி றது. அதே போன்று ஐக்கிய விவ சாயிகள் முன்னணி இந்தியாவின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக தன்மையை பாதுகாக்க, கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் அனை த்து பிரிவுகளுடனும் இணைந்து பிரச்சாரங்களை நடத்தும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம்
ராகேஷ் திகாயத் மீதான தாக்கு தலுக்கு அகில இந்திய விவ சாயிகள் சங்கம் (AIKS) கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய விவசாயி கள் சங்க தலைவர் அசோக் தாவ்லே, பொதுச்செயலாளர் விஜூ கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நடை பெற்ற பேரணியின் போது பாரதிய கிசான் யூனியன் (BKU) தலைவர் ராகேஷ் திகாயத்தின் மீது நடந்த அருவருப்பான வன்முறைத் தாக்குதலுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறது. இது கோழைத்தனமான தாக்குதல் ஆகும். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராகவே பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அரசின் தோல்வியை கேள்வி எழுப்பி, இந்து - முஸ்லிம் ஒற்றுமையின் அவசியத்தை வலி யுறுத்திய ராகேஷ் திகாயத், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இந் துத்துவ குண்டர்களால் உடல் ரீதி யாக தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் சம்பவத்தின் வீடியோ பதிவுகள் ராகேஷ் திகாயத் தாக் கப்பட்டது பொதுமக்களால் அல்ல, இந்துத்துவா குண்டர்களால் சூழப் பட்டதை தெளிவாகக் காட்டுகின்றன. இத்தகைய சூழலில் தாக்கு தலுக்கு பொறுப்பானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். சமூக விரோத சக்திகளுக்கு எதிராக பேச துணிந்த அனைவருக்கும் உத்த ரப்பிரதேச மாநில அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்துத்துவா அமைப்புகளால் ஆபத்தான முறையில் தாக்குதலுக்கு உள் ளாக்கப்படும் கருத்துச் சுதந்தி ரம் மற்றும் அமைதியான கூட்டம் போன்ற அரசியலமைப்பு உரிமை களை நிலைநிறுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டை யும் இந்த தருணம் கோருகிறது. ராகேஷ் திகாயத் மீதான கோழைத் தனமான தாக்குதலை கண்டிக்க அனைத்து முற்போக்கான மற்றும் ஜனநாயக சக்திகளும் ஒன்றி ணைய வேண்டும் என அகில இந் திய விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.