லக்னோ, ஏப்.18- மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்ற வேண் டும்; தொழுகைக்கான பாங்கு அழைப்புகளை மேற்கொள்ளக் கூடாது; மீறி பயன்படுத்தினால் மசூதி வாசல்கள் முன்பு ஒலி பெருக்கிகளை கொண்டு அனு மன் சாலிசா பாடலை ஒலிபரப்பு வோம் என்று சங்-பரிவாரங்கள் மதக்கலவர முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வன் முறைச் சம்பவங்களையும் அரங்கேற்றி வருகின்றனர். மசூதிகளில் ஒலிபெருக்கி பயன் படுத்தக் கூடாது என்று பாஜக அர சின் காவல்துறை நோட்டீஸூம் அனுப்பியுள்ளது. இந்நிலையில், பாஜக உள் ளிட்ட இந்துத்துவா கூட்டத்திற் குப் பதிலடி கொடுக்கும் வகை யில், அதே ஒலிபெருக்கி அரசி யலை சமாஜ்வாதி கட்சி கையில் எடுத்துள்ளது. வாரணாசியை சேர்ந்தவர் ரவிகாந்த் விஸ்வகர்மா. சமாஜ் வாதி கட்சி உறுப்பினரான இவர், “நாட்டில் நிலவும் வேலை யின்மை, விலைவாசி உயர்வு, கல்வி, சுகாதார, பாதுகாப்பு தேவைகள் குறித்து பேசாமல் மக்கள் மத ரீதியாக ஒலி பெருக்கி பயன்படுத்துவது குறித்து சண்டைபோட்டு வருகின்றனர். எனவே, இது போன்ற விஷயங்க ளில் மக்கள் திசைதிரும்பாமல், முக்கிய விவகாரங்களில் கவ னம் செலுத்த விழிப்புணர்வு ஏற் படுத்தும் விதமாக எனது வீட்டில் விலைவாசி உயர்வு குறித்த பாடலை லவுட் ஸ்பீக்கர் மூலம் ஒலிக்க வைக்கவுள்ளேன்” என்று வீடியோ ஒன்றை வெளியிட்டி ருந்தார். இந்த வீடியோவை அப்ப டியே டுவீட் செய்துள்ள முன் னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகி லேஷூம், “இனி லவுட் ஸ்பீக்கர் களில் சோசலிசக் கொள்கை களும், விலைவாசி உயர்வு, வேலையின்மை, குற்றங்கள் போன்ற விவகாரங்களும் ஒலிக் கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.