states

ட்விட்டர் நிறுவனத்திற்கு ரூ.1,100 கோடி அபராதம்?

புதுதில்லி, மே 26 - பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு ஆன்லைன் விளம்பரங்களை அனுப்ப டுவிட்டர் நிறுவனம் உதவிய தாக எழுந்த புகாரில் ட்விட்டர் நிறு வனத்திற்கு ரூ.1,100 கோடி  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ட்விட்டரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரு கிறார்கள். 2013-ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை ட்விட்டர் நிறுவனம், பயனாளிகளின் கணக்கு பாதுகாப்புக்காக, அவர்களின் தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரிகளை சேகரித்தது. ஆனால் பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு ஆன்லைன் விளம்பரங்களை அனுப்ப டுவிட்டர் நிறுவனம் உத வியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது. ட்விட்டர் நிறுவனத்தின் இந்த நடைமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். அதே வேளையில் ட்விட்டரின் முதன்மை வருவாய் அதி கரித்தது என்று பெடரல் டிரேட் கமிஷன் தலைவர் லினா காக் தெரிவித்தார். இந்த புகாரில் 150 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் (இந்திய மதிப்பு  ரூ.1100 கோடி) செலுத்த வேண்டும் என்றும் பயனாளிகளின் தரவுகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பெடரல் டிரேட் கமிஷன் தெரி வித்துள்ளது. கமிஷனின் இந்த கோரிக்கை யை நீதிமன்றம் அங்கீகரித்தால் ட்விட்டர் நிறுவனம் ரூ.1100 கோடி அபராதம் செலுத்த வேண்டும்.

;