புதுதில்லி, மார்ச் 2- அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி’, தனது வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை மூடுவதற்கும் கட்ட ணங்களை வசூலிக்கத் தொடங்கியுள்ளது. இதன்படி ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி’யில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், அந்த கணக்கை மூடுவதாக இருந்தால், இனிமேல் ரூ. 150 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், தனியாக ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இந்த புதிய விதி 2022 மார்ச் 5 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி, அண்மையில் சேமிப்பு கணக்குகளுக் கான வட்டி விகிதத்தையும் 0.25 சதவிகி தம் குறைத்தது. ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புகளுக்கு வட்டி விகிதம் 2.25 சதவிகிதம், ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.2 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 2.50 சதவிகிதம் என்று மாற்றியது. இது மார்ச் 1 முதல் அம லுக்கும் வந்துள்ளது. இதற்கு முன்னர் இந்த வட்டி விகிதம் ரூ.1 லட்சம் வரையிலான டெபாசிட்க ளுக்கு 2.50 சதவிகிதமாகவும், ரூ.2 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு 2.75 சத விகிதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.