states

img

டி.கே.ரங்கராஜனுக்கு ‘அப்துல் கலாம்’ வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்னை, மார்ச் .26 – ‘டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்’ பெயரிலான வாழ்நாள் சாத னையாளர் விருது, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜனுக்கு வழங்கப்பட்டது. பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன், சன்சத் ரத்னா விருதளிப்பு குழு ஆகிய தன்னார்வத் தொண்டு நிறு வனங்கள் ஒருங்கிணைந்து 13 ஆண்டுகளாக ‘சன்சத் ரத்னா’ (நாடாளுமன்ற ரத்தினம்) விருதை வழங்கி வருகின்றன. நாடாளுமன்ற அவைகளிலும், அனைத்துத் துறைகளிலும் மிகச்  சிறந்த பங்களிப்பை செலுத்தி யவர்களுக்கு  சன்சத் ரத்னா விருது 13 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரு கிறது. இதன்படி, இந்த ஆண்டு 8  மக்களவை  உறுப்பினர்களும், 5 மாநிலங்களவை உறுப்பினர்களும் ‘சன்சத் ரத்னா’ விருதுக்கு தேர்வு  செய்யப்பட்டனர். மேலும், மக்க ளவை நிதித்துறை நிலைக்குழு மற்றும் மாநிலங்களவை போக்கு வரத்து, சுற்றுலா மற்றும் பண்பாட்டு நிலைக்குழு ஆகியவையும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

வாழ்நாள் சாதனையாளர் விருது

மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி யாகவும், பொது வாழ்வுப் பெருமக னாகவும் நீண்ட நெடும் ஆண்டுகள் தொடர்ந்து தொண்டாற்றி வருபவ ருக்கு ‘ஏ.பி.ஜே. அப்துல்கலாம் வாழ் நாள் சாதனையாளர் விருது’ கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்  வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதுகள் வழங்கும் விழா  சனிக்கிழமையன்று (மார்ச் 25) புதுதில்லியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஹரியானா மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா   டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோ ருக்கு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்வில் காங்கிரஸ் நாடாளு மன்றக் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாடாளுமன்ற விவ காரத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால், ஸ்ரீரங் பார்னே எம்.பி., நாடாளுமன்ற முன்னாள் இணைச் செயலாளர் சீனிவாஸ் பிரபு, சன்சத்  ரத்னா விருதளிப்பு குழு மற்றும் பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன் நிறு வனர், தலைவர் பிரைம் பாயிண்ட் கே. சீனிவாசன், சன்சத் ரத்னா விருது குழுவின் தலைவர் பிரியதர்ஷினி ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். விழாவிற்கும், விருதாளர் களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, கேரள மாநில முதலமைச்சர் பின ராயி விஜயன் ஆகியோர்  வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனர்.