புதுதில்லி, நவ. 17 - சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி தலைதூக்கி வரும் நிலையில், மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என வங்கிகளை, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் எச்சரிக்கை செய்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கி, துணைக்குழு அதன் கீழ் உள்ள பல்வேறு தொழில்நுட்ப குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்களின் (SLCCs) செயல்பாடுகளை புதனன்று மதிப்பாய்வு செய்தார். பொதுத்துறை வங்கி களின் தலைவர்கள், மேலாண்மை இயக்குநர்கள் மட்டுமன்றி, சில தனியார் வங்கிகளின் நிர்வாகிகளும் இந்த ஆலோச னைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போதுதான், மாறிவரும் பொருளாதார சூழல் குறித்து கவனமாக இருக்க வேண்டும்; வங்கிகளின் நிதிநிலையை பாதிக்கக்கூடிய விஷயங்களின் தாக்கத்தை குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு சவால்கள் இருந்தாலும் இந்திய வங்கித் துறை தொடர்ந்து முன்னேறியே வருகிறது என்று கூட்டத்தில் பேசியுள்ள அவர், பொதுத்துறை வங்கிகளில் டெபாசிட் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது பற்றியும், குறிப்பிட்டுள்ளார். கடன் டிமாண்ட், கடன்களின் தரம், ஐடி உள்கட்டமை ப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகள், புதுயுக தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் வங்கிச் சேவை மையங்கள் (Digital Banking Units) ஆகிய விஷயங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.