states

img

இரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகத்தை மூடுகிறது இரயில்வே துறை

ஐஆர்ஓஏஎப் கழகத்தை தொடர்ந்து இரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகத்தையும் ஒன்றிய அரசு மூடியுள்ளது.    

டெல்லி - இரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகத்தை நிரந்தரமாக மூடுவதாக இரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கு முன் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி இரயில்வே துறையில் ரயில்களை மாற்று எரிபொருளில் இயக்குவதற்காக உருவாக்கப்பட்ட கழகமான, ஐஆர்ஓஏஎப் கழகத்தை ஒன்றிய அரசு நிரந்தரமாக மூடியது.  இதையடுத்து, இந்த இரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகங்கள் இதுவரை கவனித்து வந்த திட்டங்கள் அனைத்தும் அந்தந்த மண்டல இரயில் நிலையங்களிடம் ஒப்படைக்கப்படும்.

தென்னிந்தியாவில் ஏறக்குறைய 90க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்களை மேம்படுத்துவது, நிர்வகிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஐஆர்எஸ்டிசி திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.   

;