states

உக்ரைனில் இந்திய மாணவர்களை விரைவாக மீட்க ராகுல் வலியுறுத்தல்

புதுதில்லி,பிப்.26- உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாண வர்களை விரைவாக மீட்க வேண்டும் என்று  ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் துணைத் தலை வர் ராகுல் காந்தி எம்.பி.,  கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், உக்ரைனில் இந்திய மாணவர்கள் பதுங்கு குழிகளில் இருக்கும் காணொலிகள் கவலை அளிப்பதாக உள்ளது.கிழக்கு உக்ரைனில் பல மாண வர்கள் சிக்கியுள்ளனர்.  எனவே, இந்திய  மாணவர்களை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்” என்று  பதிவிட்டுள்ளார்.