புதுதில்லி, ஜன.18- டாவோஸ் மாநாட்டில் பேசிக் கொண்டி ருந்த பிரதமர் மோடி, டெலிபிராம்ப்டர் கருவி பழுதானதால், தொடர்ந்து பேச முடியாமல் ஸ்தம்பித்து நின்றது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி யுள்ளது. டெலிபிராம்ப்டர் என்பது 1960-களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கருவியாகும். சிறிய திரை என்றும் சொல்லலாம். இந்தி யாவில் இதை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் பரவலாகப் பயன்படுத்து கின்றனர். சுமார் ஒரு அடி உயரம் மற்றும் முக்கால் அடி அகலத்தில் அமைந்திருக் கும் இந்த திரையில் எழுத்துக்கள் ஓட ஓட.. அதை செய்தி வாசிப்பாளர்கள் படிப்பார் கள். எதிரில் இருப்பவர்களோ, செய்தி வாசிப்பாளர்கள், செய்திகளை மனப்பாட மாக சொல்கிறார்களே என்று கருதத் தோன்றும் வகையில் இது இருக்கும். இந்த டெலிபிராம்ப்டர் திரையையே பிரதமர் மோடியும் தனது மேடைப் பேச்சு களுக்கு பயன்படுத்தி வருகிறார். டெலி பிராம்ப்டரில் ஓடுவதையே மோடி வாசித் துக் கொண்டிருப்பார். ஆனால் எதிரில் அமர்ந்துள்ள பொதுமக்களோ, பிரதமர் தங்களை நேரடியாகப் பார்த்து பேசு கிறார் என்று நினைத்துக் கொள்வார்கள்.
இதுபற்றி ஏற்கெனவே ஒருமுறை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப் பிட்டிருந்தார். பிரதமர் மோடி பிரமாத மாக பேசுவதாக பலர் நினைத்துக் கொண் டிருக்கிறார்கள். ஆனால், டெலிபிராம்ப்டர் இல்லாமல் அவரால் ஒருவார்த்தை கூட பேச முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். ராகுலின் அந்த விமர்சனம் தற்போது உண்மையாகி இருக்கிறது. உலகப் பொருளாதார மன்றத்தின் வரு டாந்திர மாநாடு இணையவழியில் நடந் தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, வழக் கம்போல ஏற்ற இறக்கமாக பேசிக் கொண் டிருந்தார். அப்போது ஏனோ திடீரென அவ ரிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. பேச முடியாமல் ஸ்தம்பித்துப் போனார். அப்போதுதான் மோடி பார்த்து வாசித்துக் கொண்டிருந்த டெலிபிராம்ப் டர் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்பதும், திரையில் வார்த்தைகள் எதுவும் தோன்றாததால் தொடர்ந்து பேசமுடியாமல் அவர் திண றிப்போனார் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பான வீடியோவை ராகுல் காந்தியே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “நான்தான் அன்றே சொன்னேனே, பிரதமர் மோடியால் டெலி பிராம்டர் இல்லாமல் பேசவே முடியா தென்று!” என குறிப்பிட்டிருக்கும் ராகுல், டெலிபிராம்ப்டரால் கூட மோடியின் பொய் களை ஏற்க முடியவில்லை; அதனால்தான் அது ஸ்தம்பித்து விட்டது போலும் என்றும் கிண்டலடித்துள்ளார்.