states

img

மோடியை அவதூறு செய்ததாக ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை!

சூரத், மார்ச் 23 - பிரதமர் மோடி குறித்து, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்காக, அவருக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம்  2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், இதை எதிர்த்து மேல்முறை யீடு செய்வதற்காக, சிறைத்தண்ட னையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ள சூரத் நீதிமன்றம், ராகுலுக்கு 15 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை அடிப்படையில் உடனடியாக ஜாமீனும் வழங்கியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி,  2019  ஏப்ரல் 13 அன்று கர்நாடக மாநிலம் கோலா ரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரை யாற்றினார். அப்போது, “நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி  என அனைத்து திருடர்களின் பெயர்களி லும் மோடி என்று ஏன் இருக்கிறது” என்று நையாண்டியாக கேள்வி எழுப்பினார். ராகுலின் இந்தப் பேச்சானது, பிரதமர்  நரேந்திர மோடியை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த ‘மோடி’ சமூகத்தினருக்கும் களங் கத்தை ஏற்படுத்தி விட்டதாக பாஜக எம்எல்ஏ-வும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி புகார்  அளித்தார். இந்த விவகாரத்தில் 2021 அக்டோ பரில் இந்திய தண்டனைச் சட்டம் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ்  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசார ணை நடத்தி வந்தனர். ராகுல் காந்தியும் இவ்வழக்கில் 2021 அக்டோபரில் சூரத் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

2023 மார்ச் 17 அன்று தலைமை ஜூடிசி யல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இறுதி வாதம் நடைபெற்றது. அப்போது, ராகுல்  காந்தியின் வழக்கறிஞர் கிரிட் பன்வாலா ஆஜராகி வாதிட்டார். “சிஆர்பிசி (CrPC) பிரிவு 202-இன் கீழ் உரிய சட்ட நடை முறைகள் பின்பற்றப்படாததால், நட வடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே குறை பாடு உடையதாகவே உள்ளன. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினராக பிரதமர் நரேந்திர மோடிதான் புகார் அளித்திருக்க வேண்டும், பூர்ணேஷ் மோடி அல்ல. மேலும் ராகுல் காந்தி யின் பெரும்பாலான பேச்சுக்கள் பிரத மரை குறிவைத்து பேசப்படுவதை அனை வரும் அறிவார்கள்” என்று அவர் கூறினார். இதையடுத்து அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு மார்ச் 23 அன்று வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.  அதன்படி, வியாழனன்று தண்டனை விவரத்தை வாசித்த நீதிபதி எச்.எச். வர்மா, இந்திய தண்டனை சட்டப் பிரிவு  504-இன் கீழ் ராகுல் காந்தியை குற்றவாளி  என அறிவித்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்குவதாக தீர்ப்பளித்தார். உடனடியாக ராகுல் காந்தி பிணைக்கு முறையிட்ட நிலையில், அவருக்கு பிணை யும் வழங்கிய நீதிபதி எச்.எச். வர்மா, மேலும், 30 நாட்களுக்குள் தீர்ப்புக்கு எதி ராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய லாம் எனவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தார். இதையடுத்து, பிணை பெற்ற ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருந்து வெளியேறி தனது காரில் புறப்பட்டுச் சென்றார்.