states

img

ஹாத்ரஸில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ஆறுதல்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹாத்ரஸ் மாவட்டத்தில் “போ லிச்சாமியார்” பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 123 பேர் பலியாகி யுள்ளனர். 30க்கும் மேற் பட்டோர் ஆபத்தான கட்டத் தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்க ளின் உடல்கள் வியாழனன்று குடும்பத்தினரிடம் ஒப்ப டைக்கப்பட்டது. இந்நிலையில், காங்கி ரஸ் மூத்த தலைவரும்,  மக்க ளவை எதிர்க்கட்சித் தலை வருமான ராகுல் காந்தி வெள்ளியன்று ஹாத்ரஸ் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உயிரிழந்த வர்களின் குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறினார். மேலும் நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவதற்கான முயற்சிகளையும், எதிர்கா லத்தில் இதுபோன்ற சம்ப வங்கள் நடைபெறாமல் தடுக் கும் வகையில், கூட்ட நெரி சல் விவகாரத்தை நாடாளு மன்றத்தில் எழுப்புவதா கவும் ராகுல் காந்தி உறுதி அளித்தார்.  ஹாத்ரஸ் விபத்தில் உயிரிழந்தவர்களில் 17 பேர் அலிகாரைச் சேர்ந்தவர்கள் என்பதால் ராகுல் காந்தி அலிகார் பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறினார்.  பின்னர் செய்தியாளர்க ளை சந்தித்த ராகுல் காந்தி,”ஹாத்ரஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும் பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவர் கள் அனைவரும் ஏழ்மை யான குடும்பத்தைச் சேர்ந்த வர்கள், எனவே அவர்களின் இந்த கடினமான காலத்தில் உதவ வேண்டும். நிர்வா கத்தில் குறைபாடு இருப்ப தால் மிகப்பெரிய தவறுகள் நடந்துள்ளன. எனவே இந்த சம்பவம் தொடர்பாக விசா ரிக்க வேண்டும்” எனக் கூறி னார்.