புதுதில்லி, பிப்.8- வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குவதற்கு ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என மாநிலங்கள வையில் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பி னர். ஒஎஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் பேசிய வி.விஜயசாய் ரெட்டி அரசு நிறுவனங்களில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. காலி யிடங்கள் நிரப்பப்படவில்லை. அதே நேரத்தில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது என்றார். இதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசனும் வலி யுறுத்திப் பேசினார். இவர்கள் இருவரும் நாட்டில் எட்டு லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன என்பதை சபையின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். திமுக சார்பில் பேசிய திருச்சி சிவா, “ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை மேற்கோள் காட்டினார், வேலைக்காக பிற நாடுகளுக்கு குடிபெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டுள்ளனர், கைவிட்டவர்கள் அனைவரும் மிகவும் திறமையானவர்கள், அவர்கள் ஏன் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்? அவர்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும். தவறும்பட்சத்தில் அவர்கள் மற்ற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பார்கள் என்றார். கர்நாடகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எல். ஹனுமந்தய்யா (காங்.) பேசுகையில், கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சனை எழுந்துள்ளது. அரசியலமைப்பின் 14 ஆவது பிரிவு அனைவருக்கும் சமத்து வத்தை உறுதிப்படுத்துகிறது. அரசிய லமைப்பு மதத்தை கடைப்பிடிப்பதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது என்றார். இதற்கு பதிலளித்த துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யநாயுடு, “குற்றச்சாட்டு களை கூற வேண்டாம். சீருடை என்று ஒன்று உள்ளது. அந்தப் பிரச்சனை வேறு, ஹிஜாப் பிரச்சனை வேறு” என்றார்.