புதுதில்லி, ஏப்.21- வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதி காரத்தைக் கைப்பற்ற ராணுவத் தளபதி அப்தல் பதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையான ஆர்எஸ்எப் பிரிவும் (ரேபிட் சப்போர்ட் போர்ஸ்) கடும் மோதலில் ஈடுபட்டுள் ளன. இரு குழுவிலும் அரசு சார்ந்த ஆயு தங்கள் இருப்பதால் ஏவுகணை வீச்சு கூட அரங்கேறி வருகிறது. இந்த மோத லில் இதுவரை பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என 330-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த திடீர் உள்நாட்டுப் போரால் உணவு, தண்ணீர், மருந்துகள், மின்சாரம் என அடிப்படை தேவை இல்லாமல் 50 லட்சம் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இந்த 50 லட்சம் பேரில் 4,000 இந்தியர்களும் சிக்கியுள்ளனர்.
72 மணி நேர போர் நிறுத்தம்
திடீர் உள்நாட்டுப் போரை உடனடி யாக முடிவுக்குக் கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகள் வலியுறுத்திய நிலையில், ராணுவத் தளபதி தரப்பும், துணை ராணுவப் படை தரப்பும் சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு முன் வந்துள்ள நிலையில், அங்கு சிக்கி யிருக்கும் 4,000 இந்தியர்களின் மீட்புப் பற்றி பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தொடர்பில் உள்ளோம்
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களி டம் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், வெளி யுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சியும் தெரிவித்துள்ளனர். மேலும்,”சூடான் நிலவரத்தை கூர்ந்து கவனித்து வருகிறோம். கள நில வரத்தைப் பொறுத்து இந்தியர்களை பத்திரமாக சூடானில் இருந்து வெளி யேற்றுவது தொடர்பாக குறிப்பிட்ட சில நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சூடான் போர் பிராந்திய பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டினின் உடலை கொண்டுவருவதற்கு உரிய நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்” வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.