ஒன்றிய நிதியமைச்சரிடம் சு.வெங்கடேசன் எம்.பி. நேரில் முறையீடு
புதுதில்லி, டிச.14- சுங்குடி சேலைகளுக்கு ஜனவரி முதல் 12 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதை கைவிட வேண் டும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்க டேசன் நேரில் வலியுறுத்தினார். “சுங்குடி சாரீஸ்” மதுரையின் அடையாளங்களில் ஒன்று. மொழிச் சிறுபான்மையினராக உள்ள சௌராஷ்டிரா சமூத்தைச் சார்ந்த மக்கள் இத் தொழிலில் பாரம்பரி யமாக ஈடுபட்டு வருகிறார்கள். கை கட்டு வடிவமைப்பு, மெழுகு பிரிண்ட் வடிவமைப்பு, ஸ்கீரின் பிரிண்ட் வடிவமைப்பு, சாயமிடுதல் மற்றும் சலவை செய்தல் போன்ற பணிகள் இத்தொழிலில் உள்ளடக் கம். 10 ஆயிரம் குடும்பங்கள் இத் தொழிலில் ஈடுபட்டுள்ளன.
விவசாய கூலிப்பெண்கள், மீன வப்பெண்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் அணியும் உடையான இச் சுங்குடி சாரீஸ் தயாரிக்கும் தொழில் 1995-ல் குடிசைத் தொழிலாக அங் கீகரிக்கப்பட்டுள்ளது. சிறப்பான, நேர்த்தியான இச்சேலைகளுக்கு “புவிசார் குறியீடும்” 2005-ல் வழங்கி ஒன்றிய அரசு கெளரவித் துள்ளது. இத்தகு பெருமை வாய்ந்த சுங் குடி சாரீஸ் தயாரிக்கும் தொழில் ஒன்றிய அரசின் வரி விதிப்புக் கொள் கையால் பாதிப்பிற்கு உள்ளாக உள்ளது. முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டிய இத்தொழிலுக்கு 2017-ம் ஆண்டு 5 சதவீதம் வரி விதித்தது ஒன்றிய அரசு. தற்பொழுது 12 சத வீதமாக உயர்த்தி ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலாகும் என்று ஆணை பிறப்பித்துள்ளது ஒன்றிய அரசு. எளிய மக்களை பாதிக்கும் இவ்வரி உயர்வை உடனடியாக கை விட வேண்டும் என்று ஒன்றிய அர சின் நிதியமைச்சரிடம் சு.வெங்க டேசன் எம்.பி., நேரில் வலியுறுத்தி னார்.