states

img

பிஎஸ்என்எல் ஓய்வூதியர் பிரச்சனைகளுக்கு ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும்

புதுதில்லி, மார்ச் 16- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடந்துகொண்டிருக்கிறது. நாடாளுமன்ற நடத்தை விதி 377ஆவது பிரிவின்கீழ் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள வைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் பேசியதாவது:  பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனம் 2000 ஜனவரி முதல் தேதியன்று அமைக்கப் பட்டது. ஒன்றிய அரசின் டெலிகாம் துறை யில் பணியாற்றிய ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக இந்தப் பொதுத்துறை நிறு வனத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்களின் ஓய்வூதியம் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போலவே வழங்கப்படும் என்று அப்போது உறுதிமொழியும் அளிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர்களுக்குக் கடைசி யாக 2007 ஜனவரி 1 அன்று ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு 2017 ஜனவரி 1 அன்று இத்திட்டம் மாற்றி யமைக்கப்பட்டிருக்க வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஓய்வூதியத்திற்குப் பங்களிப்பு செய்ய வேண்டிய தொகையை முழுமையாகவே அளித்து வந்திருக்கிறார்கள். இவர்களுடன் பணியாற்றி இப்போதும் ஒன்றிய அரசின் கீழேயே தொடர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 2016  ஜனவரி 1 முதல் 7ஆவது மத்திய ஊதி யக்குழுவின் பரிந்துரையின்படி ஓய்வூதியம் அமலாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிஎஸ்என்எல் ஓய்வூதி யர்களுக்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியின்படி ஓய்வூதியம் அளி க்கப்படவில்லை என்று தெரிய வருகிறது. எனவே ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை  அமைச்சர் இப்பிரச்சனையில் உடனடி யாகத் தலையிட்டு, அரசு வாக்குறுதி அளித்தது போல், ஒன்றிய அரசு ஓய்வூதி யர்களுக்கு அளித்திடுவதைப் போலவே பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கும் 2017 ஜனவரி 1 முதல் ஓய்வூதியம் அளித்திட நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  (ந.நி.)