states

img

தில்லியில் தீபாவளிக்குப் பிந்தைய காற்றின் தரம் கடந்த ஆண்டைக் காட்டிலும் முன்னேற்றம்

புதுதில்லி, அக். 25 - சுற்றுச்சூழல் அபாயம் மற்றும் சுகாதார கேடுகளை கருத்தில் கொண்டு தீபாவளியன்று பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மட்டு மன்றி பட்டாசுகள் வெடிப்பதற்கு தில்லி  அரசு தடை விதித்திருந்தது. தடையை மீறுவோருக்கு அபராதம் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்ச ரிக்கை விடுத்திருந்தது. எனினும், தலை நகர் தில்லியில், தீபாவளியன்று தடை யை மீறி மக்கள் பட்டாசுகளை வெடித்த னர். எனினும், தீபாவளிக்குப் பிந்தைய  காற்றின் தரக்குறியீட்டில் தலைநகர் தில்லி கடந்த ஆண்டைக் காட்டிலும் மேம்பட்டு ஆறுதல் அளித்துள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவலின்படி, தில்லி நகரின் காற்றின் தரக் குறியீடு (Air Quality Index - AQI) திங்களன்று காலை 312 ஆக இருந்தது. இது ஒரே  இரவில் மோசமடைந்து, செவ்வா யன்று காலை 6 மணிக்கு நகரத்தின் 323 ஆக உயர்ந்தது. இது தேசிய காற்றின் தரக்குறியீட்டு அளவைக் காட்டிலும் 5 முதல் 6 மடங்கு அதிகம்தான்.  எனினும், தில்லியில் கடந்த 4 தீபாவளிகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு காற்றின் தரம் பரவாயில்லை என்றே கூற வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரி வித்துள்ளது. ஏனெனில், தில்லியில் தீபாவளிக்குப் பிந்தைய காற்றின் தரம் 2018-ஆம் ஆண்டில் 281 ஆகவும், 2019-இல் 337 ஆகவும் இருந்த நிலை யில், 2020-ஆம்  ஆண்டில் அது 414 ஆகவும் அபாயகரமான எல்லைக்குள் சென்றது. தற்போது அது 323 என ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்றுத் தர அளவீட்டு அமைப்பானது, பூஜ்ஜியத்திற்கும் 50 க்கும் இடைப் பட்ட காற்றின் தரக்குறியீட்டு அளவு  (AQI) ‘நல்ல நிலைமை’, 51 முதல் 100 வரையிலான அளவு ‘திருப்திகர மானது’, 101 முதல் 200 வரையிலான அளவு ‘மிதமானது’, 201 முதல் 300 வரையிலான அளவு ‘மோசமானது’, 301 மற்றும் 400 வரையிலான அளவு ‘மிகவும் மோசமானது’, 401 முதல் 500 வரையிலான அளவு “அபாயகர மானது” என வரையறுத்துள்ளது. இந்நிலையில் செவ்வாயன்று தில்லி யின் காற்று தரக்குறியீடு 323 என்ற அள வீட்டின் அடிப்படையில், ‘மிகவும் மோச மானது’ வரையறைக்குள்ளே இடம்பெற்றுள்ளது. தில்லியின் காற்று மாசுவுக்கு அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகையும் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. தீபாவளி கொண்டாடப்படும் அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுகின்றன. இதையொட்டி, பஞ்சாப் மாநிலத்தில் பயிர் கழிவுகளை எரிக்கும் பழக்கத்தை கைவிடும் ஒவ்வொரு சிற்றூராட்சிக்கும் ரூ. 1 லட்சம் வழங்குவதாக அம்மாநில சபாநாயகர்  குல்தார் சிங் சந்த்வான்  அறிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத் தக்கது.