புதுதில்லி, ஜூலை 10- நாடு முழுவதும் 33 சதவீத காவல்நிலையங்களில் பெயரள வுக்கு ‘சிசிடிவி’ கேமரா வசதி இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதி காரமளித்தல் அமைச்சகம், டாடா அறக்கட்டளை இரண்டும் இணைந்து, தேசிய நீதி அறிக்கையை ஆண்டு தோறும் வெளியிடுகின்றன. காவல் துறை தொடர்பாக, 2021-ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளியி டப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து காவல் நிலையங்க ளிலும் ‘சிசிடிவி’ கேமரா வசதி இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் மொத்தம் உள்ள 17 ஆயி ரத்து, 233 காவல் நிலையங்களில், 5,396 ஸ்டேஷன்களில் ஒரு ‘சிசி டிவி’ கேமரா கூட இல்லை. ஒடிசா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி யில் மட்டுமே, அனைத்து காவல் நிலையங்களிலும் குறைந்தபட்சம் ஒரு ‘சிசிடிவி’ கேமரா உள்ளது.
மக்கள் தொகை அடிப்படை யில் ஏழாவது பெரிய மாநிலமான இராஜஸ்தானில் உள்ள 894 ஸ்டேஷன்களில் ஒன்றில் மட்டுமே கேமரா உள்ளது. மணிப்பூர், லடாக், லட்சத் தீவுகளில் ஒரு காவல் நிலை யத்தில் கூட கேமரா கிடையாது. பெண்கள் பங்கேற்பு குறைவு காவல்துறையில் பெண்களின் பங்களிப்பு 10.5 சதவீதமாக உள் ளது. அதை 33 சதவீதமாக அதி கரிக்க வேண்டும். தேசிய அளவில், 2006-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை காவல்துறையில் பெண் பணியாளர்களின் பங்கு 3.3 சதவீதத்திலிருந்து 10.5 சத வீதமாக அதிகரிக்க 2020-ஆம் ஆண்டு வரை, எந்த ஒரு மாநிலமும் அல்லது எந்த ஒரு யூனியன் பிர தேசமும் தாங்கள் நிர்ணயித்த இலக்கை எட்டவில்லை. காவல்துறையில் பெண்களின் பங்களிப்பை 33 சதவீதம் அதி கரிக்க குறைந்தது 33 ஆண்டுகள் ஆகும். 41 சதவீத காவல்நிலையங் களில், பெண்களுக்கான உதவி மையங்கள் இல்லை. தேசிய அள வில், போலீஸ் படையில் பெண் களின் எண்ணிக்கையை, 33 சத வீதமாக உயர்த்த இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த மாநிலத்திலும் இது எட்டப்பட வில்லை. (பிடிஐ)