states

img

பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக வைராலகும் பிரதமர் மோடியின் பழைய உரை

பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக வைராலகும் பிரதமர் மோடியின் பழைய உரை

“மோடி தன்னைத்தானே கேள்வி கேட்கிறார்” 

புதுதில்லி  2012ஆம் ஆண்டு பிரதமர் மன்மோ கன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி ஒன்றிய அரசுக்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் எதிராக தெரிவித்த விமர்சனங் கள் இப்போது மோடிக்கே எதிராகத் திரும்பி யுள்ளன. அதாவது பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து மோடியின் பழைய உரை சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி யுள்ளது. 2012ஆம் ஆண்டு பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த பேரணி ஒன்றில் மோடி  பேசுகையில்,”பயங்கரவாதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் சென்று கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு பணம் எங்கிருந்து வந்து சேரு கிறது. முழு பணப் பரிமாற்றமும் அரசாங்கத் தின் வசம் உள்ளது. அதே போல நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியும் அரசின் கைகளில் உள்ளது. குறிப்பாக அனைத்து அமைப்புகளும் உங்கள் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு) கையில். இடையில் யாரும் இல்லை. ஆனாலும்  ஏன் உங்களால் பயங்கரவாதத்தை நிறுத்த முடிவில்லை? உங்களால் பயங்கரவாதிகளைப் பிடிக்கக் கூட முடியாது. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்? பயங்கரவாதிகள் வரு கிறார்கள் ; தாக்குகிறார்கள் ; தப்பிக்கிறார்கள். பிரதமரே, சொல்லுங்கள், எல்லைப் பாது காப்புப் படை, கடலோரப் பாதுகாப்பு, கடற்படை எல்லாம் உங்கள் கையில் இல்லையா? ஆனா லும் பயங்கரவாதிகள் வெளிநாட்டிலிருந்து எப்படி நாட்டிற்குள் நுழைகிறார்கள்?” என கேள்வி மேல் கேள்வி கேட்டார்.  மோடியின் பக்கம் திசை திரும்பியது இந்நிலையில், 2012ஆம் ஆண்டு பேசி யதை பஹல்காம் தாக்குதலுடன் குறிப்பிட்டு, “மோடி தன்னைத்தானே கேள்வி கேட்கிறார்” என்ற வாசகத்துடன் பிரதமர் மோடியின் பழைய வீடியோவை நாட்டு மக்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இத னால் மோடியின் பழைய உரை சமூக ஊடகங்க ளில் டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது. இதனால் பாஜக - ஆர்எஸ்எஸ் பரிவார் கலக் கத்தில் ஆழ்ந்துள்ளது.