இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர், “பாலஸ்தீனம் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்” என்ற டி சர்ட்டை அணிந்து கொண்டு மைதானத்தில் நுழைந்தார். வேகமாக ஓடி பேட்டிங் செய்து கொண்டு இருந்த இந்திய வீரர் விராட் கோலியை கட்டியணைத்தார். இதற்கு கோலி எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அதன்பிறகு பாதுகாவலர்களால் அந்த நபர் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரத்தால் அகமதாபாத் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.