20-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணி புரியும் தொழில் நிறுவனங்களில் 480 நாட்கள் தொடர்ந்து பணி புரிந்த தொழிலாளர்களை தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தொழிலா ளர்களுக்கு நிரந்தர தகுதி வழங்கு தல் ) சட்டம் 1981 பிரிவு 3 (1) இன் படி நிரந்தரம் செய்ய வேண்டும் என சட் டம் கூறுகின்றது. 2015 ஆம் ஆண் டில் பள்ளப்பட்டி பேரூராட்சியாக இருந்தபோது 30 நிரந்தரத் தொழி லாளர்களும் 70 தற்காலிகப் பணி யாளர்களும் பணியாற்றி வந்தனர். தற்காலிகப் பணியாளர்களில் பெரும் பகுதியினர் 2005 ஆம் ஆண்டிலிருந்து இடைவெளியின்றி தொடர்ந்து பணியாற்றி வந்தனர். இந்நிலையில், தற்காலிகப் பணி யாளர்களில் 19 பேரை நிரந்தரம் செய்ய வேண்டும் என கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி சங்கம் (சிஐடியு) சார்பாக தொழிலாளர் உதவியாளர் ஆணையர் (அமலாக் கம்) கரூர், முன்பாக 2015-ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக நடை பெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 28.8.23 அன்று தீர்ப்பு வழங்கப் பட்டது. அந்த தீர்ப்பில், வழக்குத் தொடர்ந்த 19 பேரும் 480 நாட்க ளுக்கு மேலாக பணி புரிந்தார்கள் என்பது தொழிற்சங்கத்தால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூ பிக்கப்பட்டதால் 19 பேரில் 17 பேருக்கு ஜனவரி 2007 ஆம் ஆண்டு முதலும், இருவருக்கு 2014 ஆம் ஆண்டு முதல் அனைத்து பணப் பயன்களுடன் பணி நிரந்தரம் செய்ய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு சம்பந்தமாக சனிக் கிழமை அன்று பள்ளப்பட்டியில் சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணி யன் தலைமையில் வெற்றி விளக்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தீர்ப்பு விவரங்களை விளக்கி அரவக்குறிச்சி நகராட்சி கவுன்சிலர் கே.வி.கணேசன், சிஐ டியு மாவட்ட துணைத் தலைவர் கா.கந்தசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் ஆகி யோர் பேசினர். இந்த வழக்கினை சங்கத்தின் சார்பில் தொழிலாளர் நலத் துறைக்கு எடுத்துச் சென்று வழக்காடிய சங்கத்தின் முன்னாள் பொருளாளர் கா.கந்தசாமிக்கு அனைவரும் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர். சிஐடியு பாராட்டு சிஐடியு சங்க மாவட்டத் தலை வர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் ஆகி யோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நிரந்தரப் பணி யிடங்களை ஒழித்துக்கட்ட புதிய, புதிய அரசாணைகள் வெளிவந்து கொண்டிருக்கக் கூடிய இந்த கால கட்டத்தில் 480 நாட்கள் பணி புரிந்தால் பணி நிரந்தரம் என்கின்ற இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பணி நிரந்த ரம் பெற உள்ள அனைத்துத் தொழி லாளர்களுக்கும் வாழ்த்துக்கள் என்றும், கடந்த எட்டு ஆண்டு களாக தொடர்ந்து இந்த வழக் கினை நடத்திய ஊரக வளர்ச்சி சங்கத்திற்கு, சிஐடியு மாவட்டக் குழு சார்பாக பாராட்டுத் தெரி வித்துக் கொள்கிறோம் என்றும் கூறி யுள்ளனர்.