states

img

பிரதமர் நரேந்திர மோடியின் நல்ல நாட்கள் முடிந்துவிட்டதாக தெரிகிறது..!

பாலிவுட் நடிகர்  சத்ருகன் சின்ஹா பேட்டி

புதுதில்லி, பிப். 24 - பிரதமர் நரேந்திர மோடியின் நல்ல நாட்கள் முடிந்து விட்டதாக தெரிகிறது என்று முன்னாள் பாஜக-காரரும், பாலிவுட் மூத்த நடிகரும், தற்போதைய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: எனது நண்பரான பிரதமர் நரேந்திர மோடியின் நல்ல நாட்கள் முடிந்துவிட்டதாக தெரிகிறது. பாஜக கட்சி ஒன் மேன் ஷோ, இரண்டு பேர் ராணுவமாக மாறி விட்டது.  எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு தலைவர் யார்? என்ற கேள்வியை நாம் நீண்ட நாட்களாக பார்த்து வருகிறோம். நேரு  இருக்கும் வரை மக்கள் இதே கேள்வியை கேட்டனர். இந்த சிந்தனையில் எதிர்க்கட்சி கள் ஈடுபடுவது அர்த்தமற்றது. யார் மீண்டும் பிரதமராக வந்துவிடக் கூடாது என்பதில் நமக்கிருக்கும் தெளிவு போதுமானது. ராகுல் காந்தியை திறமையான தலைவ ராக நான் பார்க்கிறேன். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், எதிர்க்கட்சி ஒற்றுமையை உருவாக்க எடுத்த முயற்சிகள் மீதும் எனக்கு அதிக மரியாதை உள்ளது. ஆனால் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து அவர் தன்னை விலக்கிக் கொண்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி 2024 மக்களவை தேர்தலில் கேம் சேஞ்சராக இருப்பார். நரேந்திர மோடி நாட்டின் பிரதம ராக முடியும் என்றால், ஏழை தேஜஸ்விக்கு (பீகார் முதல்வராவதில்) என்ன பிரச்சனை?. மக்கள் ஆதரவைப் பெறும் எவரும் அரசியலில் உயர முடியும். சிவசேனா விவகாரத்தில் விளையாட்டு இப்போதுதான் தொடங்கி உள்ளது, உச்ச நீதிமன்றம் நீதி வழங்கும் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.