states

3 ஆண்டுகளில் 37 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் சென்ற ரஞ்சன் கோகோய்?

புதுதில்லி, பிப். 16 - மோடி அரசின் தயவுடன் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற்றவர் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆவார். அயோத்தியில் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமையை, ராமர் கோயில் கட்டுவதற்கு வழங்கி, அரசாங்கமே முன்னின்று ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும் என்று 5 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷண், எஸ். அப்துல் நசீர், டி.ஒய். சந்திரசூட் உள்ளடக்கிய இந்த அமர்வுக்கு தலைமை தாங்கியவர்தான் அன்றைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.  இந்தப் பின்னணியில், பணி ஓய்வுக்குப் பிறகு ரஞ்சன் கோகோய்க்கு ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில், இந்துத்துவா அரசியலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதற்காகவே இந்த பதவி  வழங்கப்பட்டதாக சந்தேகங்கள் எழுப்பப் பட்டன. ஆனால், 5 நீதிபதிகள் அமர்வில் இடம்பெற்றிருந்த மற்றொரு நீதிபதியான அசோக் பூஷணுக்கும், பணி ஓய்வுக்குப் பிறகு 2021-இல் தேசிய நிறுவன சட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயத் தலைவர் பதவி வழங்கப்பட்ட போது,

இந்த சந்தேகம் வலு வானது. கடந்த வாரம் நீதிபதி எஸ். அப்துல்  நசீர் ஆந்திர மாநில ஆளுநராக நிய மிக்கப்பட்டது சந்தேகத்தை உறுதிப்படுத்தி விட்டது. இவை ஒருபுறமிருக்க, மோடி அரசை ‘தாஜா’ செய்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற்ற ரஞ்சன் கோகோயின் 3 ஆண்டுகால நாடாளுமன்ற செயல்பாடுகள் தொடர்பான புள்ளி விவரங்கள் அம்பலமாகியிருக்கின்றன. அதில், பதவியேற்ற நாளிலிருந்து இப்போதுவரையிலான மூன்று ஆண்டு களில், 8 மாநிலங்களவை அமர்வுகளில், மாநிலங்களவையில் ரஞ்சன் கோகோய் ஒரு கேள்வியைக் கூட கேட்கவில்லை, எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை, எந்த ஒரு தனிநபர் மசோதாவையும் முன் வைக்கவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மாநிலங்களவை கூடிய 155 நாட்களில் வெறும் 37 நாட்கள் மட்டுமே அவர் மாநிலங்களவை வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளார். இதுதொடர்பான தகவல்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. இதற்குத்தான் ஆளும் கட்சியை தாஜா செய்து பதவி பெற்றீர்களா... “சட்டமன்றமும் நீதித்துறையும் தேசத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற வலுவான நம்பிக்கையின் காரணமாக மாநிலங்களவை நியமனத்தை ஏற்றுக்கொண்டேன். நாடாளுமன்றத்தில் நீதித்துறையின் கருத்துக்களை முன்வைக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்” என்று பதவியேற்பதற்கு முன்னதாக கூறினீர்களே.. அதுவெல்லாம் என்ன ஆனது? என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.