மதவெறி அரசியல், விவசாயிகள் மீதான அடக்குமுறை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, தேர்தல் பத்திர ஊழல், கார்ப்பரேட்களின் கூட்டுக்களவாணித்தனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு எதிரான அலை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மோடியின் பசப்பு அரசியலுக்கு ஆரம்ப காலத்திலேயே பதிலடி கொடுத்து தங்கள் பக்கம் நுழைய விடாமல் பாதுகாப்பாக இருக்கும் தென் மாநில மக்களை போன்று, வடமாநில மக்களும் 10 ஆண்டுகள் அனுபவித்த ‘நரக வாழ்க்கை’ போதும் என்று திரும்பிய திசையெல்லாம் பாஜகவினரை விரட்டியடித்து வருகின்றனர். இதை ஆதாரப்பூர்வமாகவும், அரசியல்ரீதியாகவும் உறுதிப்படுத்துகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்
சீத்தாராம் யெச்சூரி
மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வருகை தந்த அவர், தீக்கதிருக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், வட இந்திய நிலவரம் குறித்து கூறிய அம்சங்கள்:
200 இடங்களைக் கூட தொட முடியாது
தற்போது வெளியாகியுள்ள நீல்சன் - டைனிக் பாஸ்கர் ஏடு இணைந்து நடத்தியுள்ள மெகா கருத்துக் கணிப்பில் பாஜகவும், அதன் கூட்டணியும் இணைந்து 200 இடங்களை கூட தொட முடியாது என தெரிய வருகிறது. நீல்சன் என்பது கருத்துக் கணிப்பு நடத்துகிற ஒரு பொது நிறுவனம். ஆனால் டைனிக் பாஸ்கர் ஏடு, வட மாநிலங்களில் பிரபலமான ஏடு. குறிப்பாக அது, பாஜக ஆதரவு பத்திரிகை எனக் கருதப்படும் ஒன்று. அந்த பத்திரிகையே தனது கருத்துக் கணிப்பில் பாஜகவின் வீழ்ச்சியை உறுதி செய்தி ருக்கிறது என்றால், குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் பாஜகவின் வீழ்ச்சி தீவிரமடைந்துள்ளது என்றே பொருள்.
வட இந்தியாவில் கடந்த தேர்தலில் மிக அதிகப் படியான இடங்களை பாரதிய ஜனதா கட்சி பெற்றது. பல மாநிலங்களில் ஏற்கெனவே அது உச்சநிலையை தொட்டிருந்தது என்பது உண்மை. எனவே அதற்கும் மேலாக இன்னும் கூடுதலான வாக்கு களைப் பெறுவது அல்லது இன்னும் கூடுதலான இடங்களை பெறுவது என்பது பாஜகவுக்கு சாத்திய மில்லை. ஆனால் தற்போதைய புதிய சூழலில் கடந்த முறை தொட்ட அந்த உச்சாணிக் கொம்பை எட்டிப் பிடிப்பது நிச்சயமாக சாத்தியமில்லை. இன்னும் குறிப்பாக, ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில் பாஜக துடைத்தெறியப்படக்கூடும் என்ற சூழல் உருவாகியிருக்கிறது எனச் சொல்லலாம். அதனால் தான் மோடி பதற்றத்தின் உச்சத்திற்கு சென்றிருக்கிறார்.
வீழ்ச்சியைத் தடுக்கும் முயற்சியில் பாஜக
அங்கு எப்படி வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவது என்ற முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறது. தங்களுக்கு ஏற் பட்டுள்ள வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு அவர்கள் கையில் எடுத்திருக்கிற ஒரு ஆயுதம் தான், வட மாநி லங்களில் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்களை குறி வைப்பது; எதிர்க்கட்சிகளைத் துண்டாடுவது. அதன் ஒரு பகுதியாகத்தான் முதலில் அவர்கள் மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை துண்டாடினார்கள். அங்கு சிவசேனாவையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி யையும் குறிவைத்து, சில தலைவர்களை அங்கிருந்து விலைபேசி பிரித்து அக்கட்சிகளை உடைத்தார்கள். இதற்காக அமலாக்கப்பிரிவு, சிபிஐ போன்ற மத்திய விசாரணை முகமைகளை பயன்படுத்தினார்கள். இப்படி கட்சிகளை உடைப்பது, தங்களது நிலையை குறைந்த பட்சம் தக்கவைத்துக் கொள்வதற்கேனும் உதவும் என்று பாஜக கருதியது.
நிதிஷ்குமாரின் கதி
இந்தியா கூட்டணி உருவான பின்பு, அதை நோக்கி பீகாரில் நிதிஷ்குமார் நகர்ந்ததை பாஜகவால் ஜீர ணித்துக் கொள்ள முடியவில்லை. எனவே அவரை குறிவைத்தது. அவரிடம் பேரம் பேசி மீண்டும் அவரை தங்களது பிடிக்குள் கொண்டு வந்தார்கள். இதுவும், அங்கு அவர்களுக்கு ஏற்படவுள்ள பெரும் இழப்பை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்கா கத்தான். ஆனால், அங்கு நிதிஷ்குமாரை மக்கள் ஓரங்கட்டிவிட்டார்கள்.
பிஜூ ஜனதாதளத்திற்குள் கலகம்
அடுத்து ஒடிசாவில் சில முயற்சிகளை மேற் கொண்டார்கள். அங்கு ஆளும் கட்சியாக உள்ள பிஜூ ஜனதா தளத்துடன் இணைந்து ஒரு அணியை உரு வாக்கி தொகுதி பங்கீடு மூலம் கணிசமாக இடங்களை கைப்பற்றி விடலாம் என பாஜக நினைத்தது. ஆனால் பிஜூ ஜனதா தளத்தின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை, பாஜகவுடன் எவ்விதமான கூட்டணியும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அக்கட்சிக்குள் பெரிய கலகமே செய்து விட்டார்கள். இதைத் தொடர்ந்து அக்கட்சி பாஜகவுடன் பகிரங்கமாக கூட்டணி என்று அமைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் அக்கட்சியை மிரட்ட துவங்கிவிட்டது பாஜக. ஆனாலும் ஒடிசாவில் வேறொன்றும் செய்ய முடியவில்லை.
வங்கத்தில் என்ன நிலை?
மேற்குவங்கத்தில் இடதுசாரிகள்- காங்கிரஸ் உள் ளிட்ட இந்தியா அணி வலுவாக முன்னேறிச் செல்கிறது. இதை பாஜகவும் விரும்பவில்லை, திரிணாமுல் காங்கிர சும் விரும்பவில்லை. அதே வேளையில் திரிணாமுல் கட்சி நிர்வாகிகள் மீது சோதனை உள்ளிட்ட நடவடிக்கை களை பாஜக ஏவியது. எனினும் மகாராஷ்டிராவில் செய்தது போல இங்கு திரிணாமுல் கட்சியை பாஜக வால் உடைக்க முடியவில்லை. பாஜகவின் முயற்சி களுக்கு திரிணாமுல் இணங்கிச் சென்றால், நிச்சயம் மேற்குவங்கத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை அது முற்றாக இழக்க நேரிடும். இதை உணர்ந்து மம்தா பானர்ஜி, பாஜகவை எதிர்த்தே நிற்க வேண்டிய கட்டாயச் சூழலில் உள்ளார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சிறு பான்மை மக்களின் முழு ஆதரவும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரசுக்கு சென்று விடும். இதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக மம்தா பானர்ஜி, மறைமுகமாக பாஜக வுடன் புரிதல் ஏற்படுத்தி கொள்கிறார்; எனினும் நேரடி யாக கைகோர்க்க முடியவில்லை.
கணிசமான சரிவு உறுதி
ராஜஸ்தான், பீகார், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தற்போது மாறியுள்ள சூழலில், எப்படியாவது ஏற்கெனவே அதிக பட்சமாக உள்ள இடங்களை தக்கவைத்துக் கொள்வ தற்குத்தான் பாஜக முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுதான் வட இந்திய மாநிலங்களில் நிலவும் உண்மை நிலை. எனவே, பாஜகவால் எந்தவிதத்திலும் மிக அதிகபட்ச இடங்களை இந்த முறை கைப்பற்ற முடியாது என்பது தெளிவாகியுள்ளது. அவர்கள் கடந்த முறை வென்ற தொகுதிகளின் எண்ணிக்கையிலிருந்து கணிசமான சரிவு ஏற்படுவது உறுதி.
தென்னிந்தியாவுக்கு குறிவைப்பது ஏன்?
அந்த சரிவை ஈடுகட்டுவதற்காகத்தான் பாஜகவும், மோடியும் தென்னிந்திய மாநிலங்களை பாஜக குறி வைக்கிறது. ஆந்திரப்பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு வின் தெலுங்குதேசத்துடனும், பவன் கல்யாணுடனும் சேர்ந்து ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். கர்நாட கத்தில் தேவகவுடாவுடன் கூட்டணி மேற்கொண்டுள்ளார் கள். தமிழ்நாட்டில் பாமகவை இழுத்துக் கொண்டார்கள். கேரளாவிலும், தெலுங்கானாவிலும் அவர்களுக்கு ஒன்றும் கைகூடவில்லை. ஆனால், பாஜக என்ன முயற்சி மேற்கொண்டாலும் தென்னிந்திய மாநிலங்களில் எதுவும் கிடைக்கப் போவ தில்லை என்பது தான் உண்மை. எனவே மோடி கூறுகிற 400 இடங்கள் அல்ல, கடந்த முறை வென்ற இடங்களைக் கூட அவர்களால் எட்டிப் பிடிக்க முடியாது. மிகப் பெரிய சரிவை இந்த முறை சந்திப்பது உறுதி. அடுத்தடுத்து வரும் விபரங்களை பார்த்தால், மோடி ஆட்சி வீழ்த்தப்படுவது உறுதி என்பது தெளிவாகிறது.
சந்திப்பு: எஸ்.பி.ஆர்.