மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். ராஜாஜி மருத்துவமனையில் ரூ.7.99 கோடி மதிப்பிலான கேத்லேப் கருவி, ரூ.64.94 லட்சம் மதிப்பிலான நுரையீரல் ஆராய்ச்சி கூடம், ரூ.21.95 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் தொடங்கப்பட்டன. உசிலம்பட்டியில் ரூ.1 கோடி மதிப்பிலான மாவட்ட பொது சுகாதார ஆய்வகமும் திறக்கப்பட்டது.