தேசியம் என்பது சமூக உணர்வு, சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவை ஒரே தோட்டமாக மாற்றி, அதில் நூறு மலர்கள் மலரும் கனவை நனவாக்கியது. ஐரோப்பாவே இன்றும் செய்ய முடியாததை இந்தியா 1950இல் செய்து காட்டியது - பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், வர்க்கங்கள், பிராந்தியங்களை ஒரே இந்தியாவாக இணைத்தது. தற்போதைய அரசியல் போராட்டங்கள் பெரும்பாலும் தேசியத்தின் பல்வேறு கட்டமைப்புகளின் பிரதிபலிப்பாக உள்ளன. புராணக் கதைகளையும் வரலாற்று உண்மைகளையும் பிரிக்கும் கோடு மெல்லியதாகவே உள்ளது. ஆர்.எஸ்.எஸ் - பாஜக அமைப்புகள் தங்களின் ‘உயர்ந்தோர்’ ஆட்சியை நிறுவ ‘தாழ்ந்தோர்’ மீது (முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள், கம்யூனிஸ்டுகள்) தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. ஆர்.எஸ்.எஸ்-ன் தேசியம் என்பது ‘இந்து ராஷ்ட்ரா’ நிறுவுவதற்கான கருத்தியல்-தத்துவார்த்த நியாயப்படுத்தல் ஆகும். இந்துத்துவா குழுக்கள் ‘இந்தி, இந்து, இந்துஸ்தான்’ என்ற ஒற்றைப்பரிமாண கோஷத்தை முன்வைக்கின்றன, அதை இந்தியா தொடர்ந்து நிராகரிக்கிறது.