நத்தம், பிப்.27- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற முகாமை வட்டார மருத்துவ அலுவலர் சேக்அப்துல்லா தொடங்கி வைத்தார். சுகாதார மேற்பார்வையாளர் மகா ராஜன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து நத்தம் பகுதியில் வத்திபட்டி, செந் துறை, சிறுகுடி, கோசுகுறிச்சி, உலுப்ப குடி உள்ளிட்ட 105-க்கும் மேற்பட்ட மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.