ஸ்ரீநகர், ஜூன் 20 - ஜம்மு - காஷ்மீரில், தேர்ந்தெடுக் கப்பட்ட அரசாங்கத்தை மோடி அரசு ஒழித்துக்கட்டி, ஜூன் 19-ஆம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெற்றது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகளை வழங்கும் அர சியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐயும், காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தையும் பறித்துக் கொண்ட மோடி அரசு, சட்டமன்றத் தேர்தலை நடத்தாமல், ஆளுநர் மூலம் மறை முக பாஜக ஆட்சியை நடத்தி வருகிறது. இவ்வாறு ஜனநாய கத்திற்கு விரோதமாக நடத்தும் ஆட்சிதான் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் கடந்த 2014-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக ஆதரவுடன், மக்கள் ஜன நாயகக் கட்சித் தலைவர் மெக பூபா முப்தி முதல்வராக பொறுப் பேற்றார். ஆனால், 2018-ஆம் ஆண்டு, பாஜக தனது ஆதரவை திடீரென திரும்பப் பெற்று, காஷ்மீர் அரசைக் கவிழ்த்தது. 2018 ஜூன் 19 அன்று மெகபூபா முப்தி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், புதிய ஆட்சி யமைக்கவோ, சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு, புதிதாக சட்ட மன்றத் தேர்தலை நடத்தவோ முன்வராத பாஜக, ஆளுநர் மூலம் காஷ்மீரை நிர்வாகம் செய்து வந்தது. பின்னர், 2019 ஆகஸ்ட் 5 அன்று காஷ்மீருக்கு சிறப்பு உரிமை கள் வழங்கும் 370-ஆவது சட்டப்பிரி வை ரத்து செய்ததோடு, மாநி லத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங் களாக மாற்றியது.
ஆனால், அதன் பிறகும் ஜம்மு - காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. தொகுதிகளை மறு சீரமைக்கிறோம் என்ற பெயரில், அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கும் தொகுதிகளை சின்ன பின்னமாக்கி, தங்களுக்கு சாதக மாக வரன்முறை செய்தது. இதன் பிறகும் கூட தேர்தல் நடத்து வதற்கு, இப்போது வரை அஞ்சிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான், ஜம்மு - காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒழித்துக்கட்டப்பட்டதன் 5 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இது குறித்து ஜம்மு - காஷ்மீர் அர சியல் கட்சிகள் தங்களின் வருத்தத் தையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளன. ‘‘இந்தியா ஜனநாயகத்தின் தாய், ஜனநாயகத்தின் கோயில். இத்தகைய வார்த்தை ஜாலங் களுக்கு மத்தியில் ஒன்றிய ஆட்சி யின் கீழ் காஷ்மீர் 5-ஆம் ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. ஜம்மு - காஷ்மீர் தொடங்கும் இடத்தில் இந்தி யாவின் ஜனநாயகம் முடிவடை கிறது’’ என தேசிய மாநாட்டுக் கட்சி யின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா டுவிட்டரில் பதி விட்டுள்ளார். ‘‘ஜனநாயகத்தின் தாய் என தன்னை அழைத்துக் கொள்வதற் காக ஒட்டுமொத்த தேசமும் அதன் தலைமையும் வெட்கித் தலை குனிய வேண்டும்’’ என மக்கள் ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மோகித் பான் சாடியுள்ளார்.