states

தமிழகத்தை தவிர்த்துவிட்டு, 6 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கிய மோடி அரசு

புதுதில்லி,ஜன.2-  தமிழகத்தை பல்வேறு வகை களில் புறக்கணிக்கும் ஒன்றிய பாஜக அரசு, தற்போது வெள்ள நிவாரண நிதியை வழங்காமலும் புறக்கணித் துள்ளது.  தமிழ்நாட்டை தவிர்த்து விட்டு மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை  மோடி அரசு விடுவித்துள்ளது. இத னால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிய அரசு மீது கோபத்தில் உள்ளனர்.  தமிழ்நாட்டில் கடந்த நவம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழையால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப் பட்டன. இந்த பாதிப்பை ஒன்றிய அரசு அனுப்பிய குழு தமிழ்நாட்டு க்கு  வந்து பார்வையிட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மழை யால் பாதிக்கப்பட்ட இடங்களை  நேரில் பார்வையிட்டார். இதன்பின் னர் கடந்த மாதம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நேரில் சந்தி த்து, தமிழ்நாட்டிற்கு ரூ.2,079 கோடி யை மழை வெள்ள நிவாரண மாக ஒன்றிய  அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் டவ்தே புய லால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநி லத்திற்கு 1,133.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  யாஸ் புயல் பாதிப்பிற்கு உள்ளான மேற்கு வங்கத்திற்கு 586.59 கோடி ரூபாய் வழங்கப் பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழையால் பாதிப்படைந்த அசாம் மாநிலத்திற்கு 51.53 கோடி ரூபாய், கர்நாடகா மாநிலத்திற்கு 504.06 கோடி ரூபாய், ஒன்றிய பிர தேசத்திற்கு 600.50 கோடி ரூபாயும், உத்தரகாண்ட்டிற்கு 187.18 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.ஆனால் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு எந்த நிவாரணமும் இல்லை.  எந்தவித நிதியும் ஒதுக்கப் படவில்லை. பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு மட்டுமே முன்னு ரிமை அளித்து நிதி வழங்கும் மோடி அரசு, மற்ற மாநிலங்களின் மக்களைப் பற்றியும் பாதிப்பை பற்றியும் எந்த  கவலையும் கொள்ள வில்லை என்பது அம்பலமாகி யுள்ளது என்று அரசியல் கட்சியின ரும் மக்களும் குற்றம்சாட்டியுள்ள னர்.  மோடி அரசு ஏற்றிய பெட்ரோல், டீசல் விலையை மாநில  அரசு குறைக்கக்கோரி ‘போராட்ட த்தில்‘ குதித்த தமிழக பாஜகவினர், வெள்ளநிவாரண நிதியை ஒன்றிய அரசு  வழங்கக்கோரி போராடுவார் களா என்ற கேள்வி எழுந்துள்ளது.