states

விலை உயர்வுக்கு எதிரான கொந்தளிப்பால் முன்கூட்டியே நாடாளுமன்ற தொடரை முடித்த மோடி அரசு

புதுதில்லி,ஏப்.7-  மோடி அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை  உயர்வாலும் அத்தியாவசியப் பொருட் களின் கடும் விலை உயர்வாலும்  மக்கள்  மத்தியில் கொந்தளிப்பும் நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்று வரு கின்றன. நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சி  எம்.பி.க்கள் விலை உயர்வுக்கு எதிராகவும் அதனை ரத்து செய்யக்கோரியும் முழக்கம் எழுப்பினர்.இதனால் நாடாளுமன்ற மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரை ஒருநாள் முன்கூட்டியே ஏப்ரல் 7 அன்று முடித்துக்கொண்டது மோடி அரசு. அவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்தி வைத்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக நடத்தப்படும் என  அறிவிக்கப்பட்டது.   முதல் அமர்வு, கடந்த  ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கியது. பிப்ர வரி 1 அன்று மத்திய பட்ஜெட்டை நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது  விவாதம் நடந்தது. இந்த முதல் அமர்வு  பிப்ர வரி 11 ஆம் தேதியுடன் ஒத்திவைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டா வது அமர்வு  மார்ச் 14 அன்று  தொடங்கி யது. இரு அவைகளும் வழக்கம்போல காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் வரை நடைபெற்றன.  இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என  அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருநாள்  முன்னதாக ஏப்ரல் 7 ஆம் தேதியுடன் முடித்துக்கொண்டது.  மாநிலங்களவையும் ஏப்ரல் 7 அன்று டன்  நிறைவுபெறுவதாக சபை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார். இதை யடுத்து தேதி குறிப்பிடாமல் மாநிலங் களவையும் ஒத்தி வைக்கப்பட்டது.