மியான்மரில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மியான்மரில் இன்று பிற்பகல் 1.24 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பர்மாவின் வடக்கு-வடகிழக்கே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கமானது மையம்கொண்டிருந்தது. மேலும் ரிக்டர் அளவில் 4.2ஆகப் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.