எதிர்காலத் தூண்களாக இருந்த மருத்துவ மாணவர்களுக்கும் இழப்பீடு வேண்டும்
டாடாவுக்கு இந்திய மருத்துவக் கழகம் கடிதம்
ஜூன் 12ஆம் தேதி குஜ ராத் மாநிலம் அக மதாபாத்திலிருந்து, லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமான நிலை யத்துக்கு அருகே மேகானி நகரில் உள்ள பி.ஜே மருத்துவக் கல்லூரியின் விடுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத் தில் பயணித்த 242 பேரில் 241 பேர் பலியாகினர். பலியானவர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என ஏர் இந்தியாவின் டாடா குழு மம் அறிவித்திருந்தது. அதே போல விமானம் விழுந்த மருத்து வக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த 7 மருத்துவ மாண வர்கள் பலியாகினர். மேகானி நகரில் சிலரும் உயிரிழந்தனர். ஆனால் விமானத்தில் பய ணிக்காமல் மேகானி நகர் பகுதி யில் உயிரிழந்தவர்களுக்கு டாடா குழுமம் இதுவரை இழப்பீடு அறிவிக்கவில்லை. இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான மருத்துவ மாணவர்கள் குடும்பத் துக்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று டாடா குழுமத்தின் நிர்வாகி என்.சந்திர சேகரனுக்கு இந்திய மருத்துவக் கழகம் வேண்டுகோள் விடுத்துள் ளது. இதுதொடர்பாக இந்திய மருத்துவக் கழகத்தின் குஜராத் பிரிவு எழுதியிருக்கும் கடிதத் தில்,”விபத்து நடந்த இடத்தில் பலியான மருத்துவ மாணவர்க ளின் குடும்பங்களுக்கும், காயம டைந்தவர்களுக்கும் டாடா குழுமம் தேவையான உதவி களை செய்ய வேண்டும். இவர் கள் விபத்தில் பலியானவர்கள் மட்டுமல்ல, எங்களது எதிர்கா லத் தூண்களாக இருந்தவர்கள். இவர்களுக்கும் உங்களது ஆதரவும் இழப்பீடும் தேவை” என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.